சரியாக இரண்டுமாத காலம் நான் டைரி எழுதாமல் விட்டிருக்கிறேன் என்பது மிக தவறான விசயம் ஆனால்
கடந்த இரண்டு மாதங்களில் நிறைய மாற்றங்களை சந்தித்து வருகிறேன்Tuesday 26 July 2016
எனது டைரி 26072016
Thursday 26 May 2016
மனம் எனும் மந்திரம் 26.05.2016
மனம் ஒரு அற்புத கருவி , ஆனால் அதன் ஆழம் எத்தனை வசீகரம் என்ன என்னவெல்லாம் மனதை கொண்டு செய்யலாம் என்பதை நாம் அறிய மாட்டோம்
சிக்மண்ட் பிராய்டின் ஆராய்ச்சி என்பது மனதை பல பகுதிகளாக பிரித்து ஆய்ந்து செல்கிறது
சப்காண்சியஸ் மைண்ட் தான் நமது முழு வாழ்வையும் நடத்தி செல்கிறது தெரியுமா எத்தனை பேருக்கு தெரியுமோ அறியேன்
அந்த ஆழ்மனதை கண்ரோலில் எடுக்க நாம் வெளி மனதில் இருந்து ஆரம்பிக்கிறோம்
அதாவது கலங்கிய குளத்தை கொஞ்ச நேரம் கலங்காமல் வைத்து விட்டு ஆற்றுக்குள் மெல்ல இறங்கி
அடி ஆழத்தில் என்ன இருக்கிறதென்று பார்க்க போகிறோம்
அதுதான் தியானம்
ஆழத்தில் ஊடுருவி பார்க்க இயலாதவர்கள் குருவின் துணையை நாடலாம் குருன்னா சாமியார்கள் இல்லை
இறைவனே நமது குரு நாதன்
அவரை வேண்டி அமைதியாக தியானத்துள் போக போக விசயங்கள் முடிச்சை அவிழ்த்து
நம் முன் நிற்கின்றன
நாம் யார் மனதை இயக்குவது எது கடவுள் எங்கிருக்கிறார் இதெல்லாம் சொன்னா புரியும்மா
இல்லை
புரியாது சொல்லவும் முடியாது உள்ளே செல்லனும் சூட்சுமமா சமைந்திருக்கும்
அந்த பரம் பொருளை பார்க்கனும் அதனுடன் ஒன்றாகனும் என்றால் தியானம்
செய்யனும்
26.05.2016
26.05.2016
Sunday 22 May 2016
எனது டைரி 23052016
கடந்த சில நாட்களாக பயிற்சி சரிவர செய்யவில்லை ஆனாலும்
எண்ணங்களின் ஒழுங்க அவை எப்படி உருவம் பெற்று உணர்வுகளை தீண்டி ரியாக்கசன்
செய்ய வைக்கிறது என்பதை நிதானமாக பார்க்க முடிகிறது .
ஆனால் இன்னும் கண்ட்ரோல் செய்ய முடியவில்லை . அதற்கு இன்னும் நிறைய மன ஆற்றல் தேவை படுகிறது 23.05.2016
Thursday 12 May 2016
எனது டைரி 13.05.2016
என்னவென்றால் , நேற்று இரவும் சரி இன்று காலையும் சரி தியானம் துல்லியமாக அமைந்ததுவியப்புக்கு உரியது
மனம்
குறிப்பிட்ட புள்ளீயில் இருத்தவே எனக்கு அரை மணி நேரம் பிடிக்கும் ஆனால்
மனம் தானாக குவிந்து விட்டது எண்ணங்கள் மறைந்து வெறும் கவனிப்பு நிலை
நீடித்தது காலத்தால் உணர்ந்து கொள்ள முடியாதது அந்த நிலை எப்போது மனம்
வந்ததோ உடனே அந்த நிலை நீங்கியது .13.05.2016
Tuesday 10 May 2016
எனது டைரி 10.05.2016
நல்ல மனிதன் கெட்ட மனிதன் நல்லது கெட்டது இதெல்லாம் உலகில் ஏன் இருக்கிறது
உலகம்
முழுக்க நல்ல விசயங்களும் பூத்து குழுங்கும் மலர் சோலைகளும் துன்ப மில்லாத
வாழ்வும் எல்லாருமே நல்லவர்களாக இருந்து விட்டால் என்ன? 10.05.2016
Monday 9 May 2016
ஒரு புதிய பாடம்
நீண்ட நாட்களாக டைரி எழுதாதது எனது ஒவ்வொரு நாளில் தியான அனுபவங்களை பதிவு செய்யாதது ஞாபகம் வந்தபின் இதை எழுதுகிறேன் .
திடீரென
மிக அதிகமான கோபம் உணர்வு ஏற்பட்டதும் எனது பிரசெப்டரை அனுகினேன் அவரது
ஆலோசனை பேரில் நீண்ட நேரம் தியானம் செய்ய ஒத்து கொண்டபின் அந்த கோபத்தில்
உணர்வு குறைய ஆரம்பித்தது கோபம் :
பொதுவாக கோபம் நமது மனதின் மேல் தளத்திற்கு வருவது வரை நமக்கு தெரிவதில்லை ஆகவே தியானத்தின் மூலம் நமது உணர்வு நிலைக்கு வரும் முன்பு அதை உணர்ந்து கொள்ள மனம் நுட்பமாக வேண்டும் என்பதுதான் கோபத்தை கட்டு படுத்த ஒரே வழி
09.05.2016
Monday 18 April 2016
எனது டைரி 18.04.2016
குறிப்பிட்ட நேரங்களில் குறிப்பிட்ட இருக்கை அமர்வில் தியானம் தொடர்ச்சியாக ஒரு எண்ணெய் ஒழுக்கை போல மனதை குவிந்து பாய செய்கிறது
மனம் மேல் நோக்கி செல்வதையும் நமது எண்ணங்களின் மீதான ஆதிக்கம் இல்லாமல் போவதை உணரலாம் 18.04.2016
Saturday 16 April 2016
எனது டைரி 15.04.2016
குறிப்பிட்ட
நேரங்கள் மாஸ்டரால் அறிவிக்கப்பட்டுள்ளன காலை 6.30 மற்றும் 8.00 மற்றும்
இரவு 9.00 மணி ஆகிய நேரங்களில் அதிக பட்ச உத்வேகம் அந்த நேரத்தில்
பாய்கிறது இந்த காலங்களில் உக்கார்ந்து பார்த்தேன் எனது முயற்சி இன்றி
தியான நிலைக்கு மனம் போவதை அறிய முடிகிறது.
அரசியல் : 15.04.2016
எனது டைரி 11.04.2016
மனம் எண்ணங்களுடன் போராடுவது ஒரு
எல்லைவரைதான் அழுது அழுது ஓய்ந்து போகும் ஒரு குழந்தைக்கு ஒப்பாக அது
நின்று விடுகிறது எதோ ஓரிரு எண்ணங்கள் தூவாணம் விழுவது போல் அங்கொன்றும்
இங்கொன்றும் வருகிறது
இதான் சமயம் மனதை பிடித்து வைத்து நான்
யார் என்ற கேள்வியை கேட்க மனம் மேலும் மேலும் ஒடுங்கி அந்த மூல இடத்தில்
நிற்கிறது அங்கேயே அதிக நேரம் நிற்க நிற்க நமது ஆன்ம பிரகாசம் அதிகமாகிறது
பிறகு கீழிறங்கி வர மனம் ஒப்பவில்லை Friday 8 April 2016
எனது டைரி 08.04.2016
தியானத்தின் போது
மனதின் ஓடும் எண்ணத்தின் பின்னால் நாம் செல்கிறோம் ஒரு இளைஞர் பதின்ம வயதில் பெண்களின்
பின்னால் செல்வதற்கும் ஒரு குடிகாரன் மதுவை தேடி போவதற்கும் ஒப்ப
நமது மனம் தொடர்ச்சியாக
எண்ணங்களை பின்பற்றி போகும்
அதற்கு எல்லையே
இல்லை எத்தனை மணி நேரம் போனாலும் தியானம் கை கூடவே செய்யாது
ஏனெனில் மனம் எனும்
ராட்டிணத்தில் ஏறிவிட்டோம் பிறகு அதுவே நின்று நம்மை இறக்கி விட்டால்தான் உண்டு
இப்போ எண்ணத்தை
கவனி என்கிறார்கள்
ஒரு சின்ன டூல்
கொடுக்கிறார்கள் கவனிக்க ஆரம்பிக்கிறோம்
ஒவ்வொரு எண்ணமாக
அது முடியும் வரை கவனிக்க வேண்டும் ஆனால் மனம் அப்படி செய்யாமல் ஒரு எண்ணத்தின் மீது
மற்றோரு எனண்ணத்தை படிய வைக்கிறது அறிகிறோமா ?
இந்த எண்ணம் முடிந்த்தும்
மற்றொரு எண்ணம் தோன்றும் அதுவும் முடியட்டும் கொஞ்சம் கொஞ்சம் மாக இந்த எந்திரம் நின்றுவிடும்
ஏனெனில் அதற்கு
சக்தி இல்லை அந்த சக்திதான் இப்போ கவனிக்க இறங்கிடுச்சே
எண்ணம் இல்லாட்டா
மனம் ஏது மனம் தானே நாம்
எண்ணம் ஒழிய மனோ
நாசம் ஏற்பட்டால் தூய ஆத்மா பிரகாசிக்கும் இதான் சுருக்கமான ஒரு விளக்க உரை
நம்ம கையில் இருப்பது
எண்ணங்களை கவனித்தல் இந்த ஒரு விசயத்தை தவிர
உலகம் கடவுள் மனிதன் இதெல்லாம் விவாதிப்பதும் பேசுவத்உம் மேலும் மேலும் மனதில்
எண்ணத்தை உண்டாக்கவும் தியான காலத்தில் இடைஞ்சல் செய்யவும் ஆரம்பிக்கிறது
விவாத்த்தில் எந்த
உண்மையும் கண்டு பிடிக்க முடியாது ஏனெனில் விவாதம் என்பது எண்ணங்களை கொண்டு செய்யப்படும்
விசயம் எண்ணத்தை வைத்து எதை செய்தாலும் அது குறைபாடு கொண்ட்து ஏனெனில் எண்ணம் என்பது
பழைய பதிவுகளின் அடிப்படையில் மனம் உருவாக்கும் ஒரு விசயம்
ஆனால் விசயங்கள் புதியவை
Thursday 7 April 2016
எனது டைரி 06.04.2016
இன்றைய தியானம் மிக சிறப்பானது அதி சிறப்பானது ஏனெனில் இந்த
நிலையை சொல்லால் விளக்க முடியவில்லை ஓயாமல் பேசிக்கொண்டும் அலைந்து
கொண்டும் இருக்கும் மனம் தனியாக பிரிந்து நின்றதை உணர்ந்து கொள்ளும் நிலை
அதி உன்னத மானது இறைவனுக்கு நன்றி
இன்று காலை முதல் மொத்தம் மூன்று முறை தியானத்தை முயற்சித்து சாயுங்கால தியானம் கூடி வந்தது குறித்து மகிழ்ச்சி 07.04.2016
எனது டைரி 06.04.2016
மேற்கண்ட புள்ளிகளை பற்றி பேசும்போது எனது பிரசெப்டர் அடுத்த
கட்டத்திற்கு முன்னேறி தியான காட்சிகள் பற்றி பேச ஆரம்பித்தார் காட்சிகள்
எல்லாம் பொய் என்பது அவரது வாதம் ஆனால் வராது வந்த மாமணியாய் அமைந்த
காட்சிகளை அவர் மறுப்பதை எனது மனம் ஏற்று கொள்ளவில்லை
தொடர்ந்து காட்சிகளும் அமையவில்லை என்பது வருத்தமான விசயம் இருந்தாலும் தொடர் முயற்சி பயனளிக்கும் அல்லவா? னிதன் தேடி தேடி ஓடி அலையும் விசயங்களான பணம் புகழ் மோகம் ஆக்கியன அவனை முன்னேற விடாமல் பிடித்து வைக்கின்றன
ஆனால் நாம் அதை உணரமாட்டோம் எங்கோ ஒரு கோயில் திண்ணையில் உக்கார்ந்திருக்கும் ஒரு யோகியை விட பரிணாம வளர்ச்சியில் கீழ் தட்டில் இருக்கும் ஒரு நபர் காரில் சென்று கொண்டு இருக்கலாம்
ஆனால் அந்தோ அந்த மனிதன் பரிதாபத்துக்கு உரியவன் என்கிறார்கள் யோகிகள்
06.04.2016
எனது டைரி 02.04.2016
தியானத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி நகரவேண்டும் என்பதுதான் எனது
விருப்பம் ஆனால் தியானம் என்பது எந்த விருப்பத்தையும் கொண்டிருக்க கூடாத
ஒரு விசயம் என்பதை திரும்ப திரும்ப மனதுக்கு சொல்ல வேண்டியதிருக்கிறது
ஆசை
என்பதை பொருத்தவரை நமது மனதில் a , b , c என்ற மூன்று புள்ளிகள்
இருக்கின்றன இது இடது மார்பின் நிப்பிலில் இருந்து இரண்டு இஞ்சு கீழே a
அதிலிருந்து முறையே இரண்டு இஞ்சு இடைவெளியில் இரண்டு புள்ளிகள் இருக்கின்றன
.
A - இந்த புள்ளியில் நமது ஆசைகள் உற்பத்தியாகின்றன எந்த ஒரு ஆசையும் இங்கு உற்பத்தி ஆகிறது
B - இந்த புள்ளியில் ஆசை நிறைவேற்றத்துக்கு தேவையான பதிவுகள் பதிவாகின்றன
C- இந்த புள்ளியில் ஆசை நிறைவேறினால் ஏற்படும் மகிழ்ச்சியும் அது நிறைவேறாவிட்டால் ஏற்படும் வலியும் பதிவாகின்றன
இந்த பதிவுகள் ஏற்படுத்தும் புள்ளிகள் மீது கிளீனிங் செய்வது ரொம்ப முக்கியமானது
ஏனெனில் எவ்வளவு அழங்காரமான பங்களாவாக இருந்தாலும் குப்பையை கூட்டி ஒதுக்கி அதை சுத்தமாக வைக்கவேண்டும் அது நமது கடமை
முதல்
புள்ளியில் தொடர்ச்சியாக கவனிக்க நமது ஆசைகளை கண்டறியலாம் இரண்டாவது
புள்ளியில் இருக்கும் பதிவுகளை வெளியேற்ற தினமும் இருபது நிமிடம் செலவு
செய்து அந்த புள்ளி மீது கவனித்து தேவையற்ற ஆசைகள் வெளியேறுவதாக நினைக்க
வேண்டும் மற்றபடி மத்த புள்ளிகள் ஆக்டிவேட் ஆகும் போது நமது உணர்வு நினை
வளர்ந்து விடும் பிறகு நமக்கு அறியாமல் ஆசைகள் கோபம் காமம் உருவாகாது
இதை பயிற்சி செய்கிறேன் நீங்களும் முயற்சி செய்து பார்க்கலாம்
யேசுராஜன் 02.04.2016
எனது டைரி 31.03.2016
நேற்று அந்த பெண் பிரசப்டர் பேசிய
விசயங்கள் மனதில் பதிந்து போயின பிராத்தனையை ஒரு கருவியாக்கி அதையே
ஆயுதமாக்கி நமது மனதின் மீது எப்படி பிரயோகிப்பது என்பதை சொல்லி கொடுத்தார்
வாழ்க அவர் 31.03.2016
எனது டைரி 30.03.2016
என்னதான் நமது தந்தை அன்பானவர்
சிறப்பானவர் உலகை படைத்தவர் என்றாலும் அவரை நான் தியானிக்கிறேன் என சொல்லி
கொண்டாலும் அவரது அருமையான போற்றதக்க குணங்களில் ஒன்று மன்னிக்கும் குணம்
அது என்னிடம் இருக்கிறதா என சோதித்து பார்த்துகொண்டேன் அது இல்லை
என்பதுதான் உண்மை
உடனே அதற்கான பிரேயரை ஆரம்பிக்கனும்
ஏனெனில் பிரேயர் இது ஒன்றுதான் வழி வேற வழியே இல்லை நான் யாரை எல்லாம்
துன்புறுத்தி இருக்கிறேனோ மனதான் சொல்லால் செயலால் அவர்களுக்காக மன்னிப்பை
கோரும் பிரேயரை தொடங்கிய உடனே அப்போ நம்மை துன்புறுத்தியவர்கள் சரியாக
செய்தார்களா என்கிற எண்ணமே 30.03.2016
எனது டைரி 28.03.2016
யார் மிகவும் அன்பானவர்கள்
அன்னையா அப்பனா என்றால் குழந்தைகள் அன்னை என்றுதான் சொல்லும் ஆனால் அந்த
சிவனோ அப்படி அல்ல அவன் அம்மையப்பன் - தாயுமாகி நின்றவன் அவர் விசயத்தில்
அப்படி பட்ட கோடுகள் இல்லை
ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே
தேனே அமுதே கரும்பின் தெளிவே தித்திக்கும்
மானே அருளாய் அடியேன் உனைவந் துறுமாறே.
28.03.2016
எனது டைரி 25.03.2016
மாயை என்கிறோமே அந்த மாயை
என்பதுதான் என்ன நமது மனம்தானே அது நாமே நமக்கு ஏற்படும் எண்ணங்களில்
இருந்து விடுபட முடியவில்லை என்றால் நம்மை யார்தான் காப்பாற்ற இயலும்
மேல் மனம் ஆழ் மனம் என்கிற இரண்டு விதமான மனமாக ஒரு பேச்சுக்கு அதை பிடித்து பார்த்தால்25.03.2016
Tuesday 22 March 2016
எனது டைரி 22.03.2016
மாயை தியான வாழ்வை ஒவ்வொரு கனமும் அடித்து
நொறுக்க பார்க்கிறது விழிப்புற்ற மனம் அதை உணரமுடியும் ஆனால் இந்த விழிப்பு
நிலை பல படித்தரம் உடையது ஆழ் மனதில் ஏற்படும் கோபமோ காமமோ ஆசையோ மேல்
மனதில் உணரப்படும் வரை சிலருக்கு தெரிவதில்லை
ஆனால் சம்ஸ்காரங்களை அசைவை கூட கண்டறிய கூடிய யோகி அதை அறிந்து அந்த எண்ணத்தை நசுக்கி போடுகிறான் 22.03.2016
என்
எனது டைரி 21.03.2016
என்னதான் அமைதியாக இருக்க
நினைத்தாலும் மரத்தை காற்று விடுவதில்லை அசைக்கிறது அசைத்து அசைத்து அதை
வேறோரு பிடிங்கு எறிந்துவிட முனைகிறது
ஆனால் மரம் ஒரு நெகிழ்வு தன்மையோடு காற்றுடன் போராடினால் உடையாது தப்பிக்கிறது 21.03.2016
Saturday 19 March 2016
எனது டைரி 19.03.2016
எனது எழுத்துக்கள் எங்கும் யாராலும் மட்டறுத்தவோ தடை செய்ய படவோ கூடாது என நினைக்கிறேன் அப்படி பயந்து கொண்டு ஏன் எழுதவேண்டும்
யாரோ ஒரு சிலர் படித்தாலும் அதனால் என்ன ? எண்ணிக்கையில் நிறைய பேர் படிப்பது குமுதம் பத்திரிக்கைதான்
எண்ணிக்கை குறைவு என்பதெல்லாம் பிரச்சனை இல்லை
எனது டைரியை படிப்பவர்கள் இங்கேயே கருத்தை சொல்லுங்கள்
தியானம் தொடர்கிறது , குறிப்பிடத தக்க முன்னேற்றங்கள் இருக்கின்றன ஆனால் அவற்றை எப்படி குறிப்பிடுவது என தெரியவில்லை
நான் ஆத்மா என்கிற நினைப்புக்கும் உண்மையில் நான் ஆத்மா என்பதற்கும் பாரிய வேறுபாடுகள் உள்ளன என்பதை உணர்கிறேன்
தொடருவோம்
19.03.2016
யாரோ ஒரு சிலர் படித்தாலும் அதனால் என்ன ? எண்ணிக்கையில் நிறைய பேர் படிப்பது குமுதம் பத்திரிக்கைதான்
எண்ணிக்கை குறைவு என்பதெல்லாம் பிரச்சனை இல்லை
எனது டைரியை படிப்பவர்கள் இங்கேயே கருத்தை சொல்லுங்கள்
தியானம் தொடர்கிறது , குறிப்பிடத தக்க முன்னேற்றங்கள் இருக்கின்றன ஆனால் அவற்றை எப்படி குறிப்பிடுவது என தெரியவில்லை
நான் ஆத்மா என்கிற நினைப்புக்கும் உண்மையில் நான் ஆத்மா என்பதற்கும் பாரிய வேறுபாடுகள் உள்ளன என்பதை உணர்கிறேன்
தொடருவோம்
19.03.2016
Wednesday 16 March 2016
எனது டைரி 21.01.2016
இந்த சில நாட்கள் நான் டைரி எழுதவில்லை என்பது வருத்தமான விசயமே
ஏனெனில் நான் தியானமும் அரைகுறையாகவே செய்கிறேன்யேசுராஜன்
21.01.2016
எனது டைரி 18.01.2016
எதையுமே அளவா செய்யனும் என்பது எனக்கு புரிந்தது தை பொங்கல் முடிந்ததுதாம்
சும்மாதானே இருக்கிறோம் என நினைத்து உடலை பலப்படுத்துகிறேன்னு அதிகமா எக்செர் சைஸ் செய்தேன்யேசுராஜன்
18.01.2016
எனது டைரி 11.01.2016
தியான வாழ்வு என்பது நடைமுறை அலைகள் நிறைந்த மனதுடன் நடக்கும் போராகும்
அலைகள் அமைதியானபின் மனதை பார்பதே ஒரு இன்பமான காட்சி யேசுராஜன்
11.01.2016
எனது டைரி 03.01.2016
ஆன்மீகம் என்பது முற்றிலும் ரகசியமானது என்கிறார்கள் ஆனால் அது ஏட்டளவில் படிப்பதற்கும் விவாதிப்பதற்கும் உண்டான விசயமல்ல
முதலில் பயிற்சி அல்லது நடைமுறை எப்போதாவது பேச்சு இதான் ஆன்மீகம் என்பது தாழ்மையான எனது கருத்து
தியானம் என்பது பற்றி சுமார் 1000 புத்தகம் தமிழில் எழுத பட்டிருக்கலாம் ஆனால் இதையெல்லாம் படித்தால் தியானம் செய்யவே முடியாது
சுமார் 200 மணி நேரங்கள் தன் வாழ்வில் தியானம் செய்து பார்க்காத யாரும் தியானத்தின் வாசலில் நுழைய வே முடியாது
சரி
மனதை துரியத்தில் நிலைப்படுத்துவதில் ஒரு நல்ல விளைவு ஏற்பட்டது
வேலைகளை அதீத சுறுசுறுப்புடன் செய்கிறேன்
யேசுராஜன்எனது டைரி 31.12.2015
நண்பருடன் பேசிக்கொண்டிருக்கையில் சில கவிதைகள் தோன்றியது
-யேசுராஜன்
நான்
யாரென்று நீ நினைக்கிறாய் ,
ஜன்னல் ஓரத்தில் செல்லும் நிலா ,
மாடியில் உதிக்கும் சூரியன் ,
சுண்டல் விற்கும் யாரோ ஒருவன் ,
எந்த நோக்கமும் இன்றி வீசும் காற்று
ஜன்னல் ஓரத்தில் செல்லும் நிலா ,
மாடியில் உதிக்கும் சூரியன் ,
சுண்டல் விற்கும் யாரோ ஒருவன் ,
எந்த நோக்கமும் இன்றி வீசும் காற்று
எந்த
முகவரியும் இல்லாத
தேவைபடாத மனிதன் நான்
முகவரிகளை எனக்கு பொருத்தாதே
வேண்டுமானால்
என்னை அழைத்து கொள் அட அசடேன்னு
என் அம்மாவின் விழித்தல் அதுதேவைபடாத மனிதன் நான்
முகவரிகளை எனக்கு பொருத்தாதே
வேண்டுமானால்
என்னை அழைத்து கொள் அட அசடேன்னு
-யேசுராஜன்
எனது டைரி 28.12.2015
நெற்றில்யில் ஏற்றி வைக்கப்பட்ட அந்த உணர்வு அதாவது குண்டலினி சக்தி துரிய நிலைக்கு உயர்த்தப்பட்டது (27/12/2015)
என்னுடன்
சுமார் 35 பேர் இந்த தீட்சை எடுத்து கொண்டார்கள் தலையில் மேல்பகுதியில்
ஏற்கனவே தீட்சை வாங்கிய மூத்த சாதகர்கள் தொட்டு உணர்த்தி காண்பித்தார்கள்
எளியமுறை குண்டலினி
யோகப் பயிற்சியில் ஒன்பது தவமுறைகள் உள்ளன.
1. ஆக்கினைத் தவம் 2. சாந்தி தவம் 3. துரிய தவம் 4. துரியாதீதத் தவம் 5. பஞ்சேந்திரிய தவம் 6. பஞ்சபூத நவக்கிரகத் தவம் 7. ஒன்பது மையத் தவம் 8. நித்தியானந்த தவம் 9. இறைநிலைத் தவம் Copy the BEST Traders and Make Money : http://bit.ly/fxzulu
Copy the BEST Traders and Make Money : http://bit.ly/fxzulu
1. ஆக்கினைத் தவம் 2. சாந்தி தவம் 3. துரிய தவம் 4. துரியாதீதத் தவம் 5. பஞ்சேந்திரிய தவம் 6. பஞ்சபூத நவக்கிரகத் தவம் 7. ஒன்பது மையத் தவம் 8. நித்தியானந்த தவம் 9. இறைநிலைத் தவம் Copy the BEST Traders and Make Money : http://bit.ly/fxzulu
Copy the BEST Traders and Make Money : http://bit.ly/fxzulu
நான் மூன்றாவது படியை செய்து கொண்டு இருக்கிறேன்
யேசுராஜன்எனது டைரி 25.12.2016
தொடர்சியாக மனதை குவிய செய்வதில் வெற்றி பெற்றேன் என சொல்ல முடியாது
ஆனால் ஒரு புள்ளியை சுமார் ஒரு மணி நேரம் சுற்றி வர மனம் பழகி கொண்டது Monday 14 March 2016
அறிந்ததினின்றும் விடுதலை -ஜிட்டு கிருஸ்ணமூர்த்தி
அறிந்ததினின்றும் விடுதலை
யாலாஜிகல் சொசைட்டியின் ஆன்மீக தலைவர்கள் மூலம் நாம் இன்னின்ன
மனிதன் ஆண்டாண்டு
காலமாக தனக்கு அப்பாற்பட்ட ,பொருளாதாய வாழ்வுக்கு அப்பாற்பட்ட ஏதோ ஒன்றை தேடிக்கொண்டே
வந்துள்ளான் .
அவற்றை நாம் இப்படி
அழைக்கிறோம் கடவுள் , அல்லது உண்மை அல்லது காலம் கடந்த நிலை –எண்ணத்தாலோ சூழலால் தாக்கப்படாத
மாறுபடாத நிலை .
மனிதன் எப்போதுமே
கேட்டுவந்துள்ள கேள்விகள் .இதெல்லாம் எதற்காக ? இந்த வாழ்வில் ஏதேனும் அர்த்தம் உள்ளதா?
. வாழ்வில் மிக அதிக குழப்பத்தை அல்லது குழம்பி போன நிலை, மிருகத்தனமான போர்கள் ,கிளர்ச்சிகள்,
முடிவற்ற பிரிவுகள் கொண்டுள்ள மதம்,லட்சியங்கள் மற்றும் தேசாபிமானம் .மிக ஆழ்ந்த நுண்ணுணர்வுடன்
இதை உணர்ந்து இந்த கேள்வியை கேட்கிறான் . ஒரு மனிதன் என்ன செய்யவேண்டும் . வாழ்க்கை
என நாம் அழைப்பதற்கு பொருள்தான் என்ன? இந்த
வாழ்வுக்கு மேற்பட்டு எதாவது உள்ளதா?
ஆயிரம் பெயர்கள்
கொண்ட அந்த பெயரற்ற ஒன்றை கண்டறிய முயன்றிருக்கிறான் . ஒரு மீட்பரின் மேலோ அல்லது லட்சியத்தின்
மீதோ நம்பிக்கையை வளர்த்து வந்துள்ளான் ஆனால் நம்பிக்கை தவிர்க்க முடியாமல் வன்முறையை
வளர்க்கிறது.
பல நூற்றாண்டுகளாக
நாமெல்லாம் நமது ஆசிரியர்கள் ,மற்றும் மகான்கள் , புத்தகங்களால் ஊட்டி ஊட்டி வளர்க்கப்பட்டிருக்கிறோம்.
நாம் இந்த மலைகளுக்கும் கடலுக்கும் அப்பால் மேலும் இந்த பூமிக்கு அப்பால் என்ன இருக்கிறது
என்று கேட்டால் அவர்கள் தரும் விளக்கங்களை கேட்டு நாம் திருப்தியடைகிறோம் அதாவது நாம்
வார்த்தைகளில் வாழ்கிறோம் நமது வாழ்க்கை; ஆழமற்றதாகவும் ஒரு காலி டப்பாவாக இருக்கிறது.
நாம் இரண்டாந்தர மனிதர்கள் (second hand people). நாம் வாழ்வது நமக்கு என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ
அதை பற்றிகொண்டு குறுகிய வரையறுக்கப்பட்ட ஒரு வாழ்க்கைமுறை ,ஒரு குறிப்பிட்ட சமூகத்தால்
வற்புறுத்தி ஏற்றுகொள்ள செய்யப்பட்ட வாழ்முறையில் வாழ்ந்து வருகிறோம்.
நாம் என்பது அனைத்து
வகையான நம்பிக்கைகள் கருத்துக்களின் விளைவு தானே தவிர நம்மிடம் புதுமையானதென்று ஏதுமில்லை
,நாமே கண்டறிந்தது ஒரிஜினலானது என்று ஏதுமில்லை நம்மிடம்.
யாலாஜிகல் சொசைட்டியின் ஆன்மீக தலைவர்கள் மூலம் நாம் இன்னின்ன
சடங்குகளை
கடைபிடிக்க
வேண்டும் என்றும் சில மந்திரங்களை திருப்பி திருப்பி சொல்ல வேண்டும்
என்றும் பிராத்தனைகளை
தொடர்ந்து செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளோம் ,நமது இயற்க்கை
உந்துதல்கள் அதனால் ஏற்படும் ஆசைகள் ,காமம் ஆகியவற்றை அடக்கி
ஒடுக்கவேண்டும்
என ஆண்டாண்டுகாலமாக கற்பிக்கப்பட்டுள்ளது . பொதுமான அடக்குமுறையை மனமும்
உடலும் அடைந்த
பிறகு நாம் இந்த சின்னஞ்சிறிய வாழ்க்கைக்கு மேலுள்ள ஒன்றை அடைவோம் என
சொல்லப்படுகிறது
. இதைத்தான் மில்லியன்கணக்கான ஆன்மீக வாதிகள் என்றழைக்கப்பட்டவர்கள் பல
தலைமுறைகளாக
செய்திருக்கிறார்கள். காடுகளுக்கு ஓடிவிடுவதோ அல்லது சின்ன திருவோட்டை
ஏந்தி பிச்சை
எடுத்து வாழ்வதோ அவர்களது வாழ்க்கை முறையாக உண்மையை தேட, சாமியார்
மடங்களில் சேர்ந்து
விடுவதோ அல்லது ஒரு குரூப்பாக சேர்ந்து தமது மனதை ஒரு குறிப்பிட்ட
சட்டதிட்ட முள்ள
வாழ்க்கைக்கு பழக்கப்படுத்தி கொள்ளவோ செய்கிறார்கள். ஆனால் அடக்குமுறைக்கு
உள்ளாக்கப்பட்ட
மனம் ஒரு உடைந்துபோன மனமாகும் எது வெளி உலகத்தை வேண்டாம் என்று ஒதுக்கி
மிகவும் சோர்வடைந்த
மனம்(which
has denied the outer world and been made dull
through dis- cipline and
conformity -) எவ்வளவுதான்
புனிதமடைந்ததாக காட்டி கொண்டாலும் அது உண்மையை அதற்குரிய வழியில் (உடைந்து போனதை போலவே)
காணும் .(
however long it
seeks, will find only according to its own
distortion.)Monday 15 February 2016
தமிழ் எதிர்பாளருக்கு கண்டனம்
மிஸ்டர் ஐயப்பன் தாங்கள் தவறுதலாக இங்கே மின் தமிழில் வந்து பேசிக்கொண்டு இருக்கிறீர்கள் என நினைக்கிறேன்
தமிழனை தாக்கி பேசியது நீங்கள் என்று சொல்லவில்லை மேலும் பண்புடன் குழுமத்தையே நான் மறந்து விட்டேன்
பொதுவாக வரலாற்றுக்கு முந்தைய காலங்களில்
ஏட்டில் எழுதப்பட்ட வரலாறுகளுக்கு முந்தைய காலத்தில் தென்குமரி கடலில்
லெமூரியா கண்டம் இருந்தது அங்கிருந்தான் மனித சமூகமே தோன்றியது
என்பதெல்லாம் கருது கோள்கள் கோட்பாடுகளே
அவற்றை அப்போது படமெடுக்க அதற்கான உபகரணங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதை//
குமரிக்கண்டம் என்பது முற்காலத்தில் இருந்ததாகக் கருதப்படும், கோட்பாடுகளால் ஊகிக்கப்படும் அல்லது இலக்கியங்களில் கற்பனையாகவோ சாட்சியாகவோ கூறப்படும் கண்டம் அல்லது பெருநிலப்பரப்பாகும். குமரிக்கண்டம் எனும் கண்டம் போன்ற பெரும் நிலப்பகுதியானது இன்றுள்ள இந்தியாவின் எல்லையான குமரி முனைக்குத் தெற்கே முற்காலத்தில் பாண்டியர்களின் ஆட்சிக்குக் கீழ் அமைந்திருந்ததெனக் கருதுவதற்கு இடம் தரும் வகையில் பண்டைத் தமிழ் இலக்கிய நூற்களில் சில தகவல்கள் உண்டு. தேவநேயப் பாவாணர் முதலானோர் இந்தக் குமரிக்கண்டத்தில்தான் மாந்தர்களும் தமிழர்களும் முதன்முதல் தோன்றினரென எழுதியுள்ளனர்[1] ஆதி மனிதன் தோன்றியிருக்கக் கூடிய தென் குமரிக்கண்டம் கடல்கோளால் (சுனாமி போன்ற ஆழிப்பேரலைகளால்) அழிவிற்குட்பட்டது என்பது சில தமிழறிஞர்களின், அறிவியல் முறைப்படி நிறுவப்படாத, கருத்து. பண்டைத்தமிழ் இலக்கிய நூல்களில் கிடைக்கப்பெறும் தகவல்களில் சிலவற்றைக் கீழே காணலாம்:
- சிலப்பதிகாரத்தில் "பஃறுளியாறும்", "பன்மலை அடுக்கத்துக் குமரிக்கோடும்" "கொடுங்கடல் கொண்டது" பற்றிக் கூறுகின்றது.
- அடியில் தன்னள வரசர்க் குணர்த்தி
வடிவே லெறிந்த வான்பகை பொறாது
பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு
தென்றிசை யாண்ட தென்னவன் வாழி (சிலப். 11:17-22) - பாண்டியனை வாழ்த்தும் பொழுது
"செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்த
முந்நீர் விழவின் நெடியோன்
நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே" (புறம் 9) - "தொடியோள் பௌவம்" என்னும் சிலப்பதிகாரத் தொடர்க்கு அடியார்க்கு நல்லார் என்னும் உரையாசிரியர் கொடுக்கும் விரிவான விளக்கத்தில் "தென்பாலி முகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளி என்னும் ஆற்றிற்கும் குமரியென்னும் ஆற்றிற்கும் இடையே எழுநூற்றுக் காவத வாறும், இவற்றின் நீர்மலிவானென மலிந்த ஏழ்தெங்க நாடும், ஏழ்மதுரை நாடும், ஏழ்குணகாரை நாடும், ஏழ்பின்பாலை நாடும், ஏழ்முன்பாலை நாடும், ஏழ்குன்றநாடும், , ஏழ்குறும்பனை நாடும் என்னும் இந்த நாற்பத்தொன்பது நாடும் குமரி கொல்லம் முதலிய பன்மலைநாடும், காடும் நதியும் பதியும் தடநீர்க்குமரி வடபெருங்கோட்டின் காறும் கடல் கொண்டொழிதலாற் குமரியாகிய பௌவ மென்றா ரென்றுணர்க." [2]
- இரண்டாம் சங்கம் இருந்த காலத்தில் கபாடபுரம் என்ற தலைநகரம் முழுகிய பின்னரும் குமரி ஆறு இருந்ததென்பதை தொல்காப்பிய சிறப்புப் பாயிர வரி, "வட வேங்கடந் தென்குமரி" குறிப்பதாகக் கருதுகின்றனர்.
- தெனாஅ துருகெழு குமரியின் தெற்கும்"
"குமரியம் பெருங்துறை யயிரை மாந்தி" (புறம் 6:67) - "மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின்
மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்பட" (கலித். 104)
என்னும் குறிப்பு, பழம் பாண்டிய நாட்டைக் கடல்கொண்டதை குறிக்கின்றது என்பர். - இறையனார் அகப்பொருள் உரையில் விரிவாக ஆண்ட அரசர்களின் வரிசை, தமிழ் அவையில் இருந்த புலவர்களின் வரிசை முதலியன குறிக்கப்பெற்றுள்ளன. இதுபோலச் செய்திகள் தமிழ் இலக்கியத்தில் வேறு எங்கும் இல்லை.
https://ta.wikipedia.org/wiki/
தமிழ் பற்றும் கடமையும்
பொதுவாக இணைய வெளியில் தமிழ் உணர்வு மேலோங்கி வருகிறது
தமிழனாக இருந்தால் இதை பகிரவும் என்றெல்லாம்
Subscribe to:
Posts (Atom)