Monday 18 April 2016

எனது டைரி 18.04.2016

குறிப்பிட்ட நேரங்களில் குறிப்பிட்ட இருக்கை அமர்வில் தியானம் தொடர்ச்சியாக ஒரு எண்ணெய் ஒழுக்கை போல மனதை குவிந்து பாய செய்கிறது
மனம் மேல் நோக்கி செல்வதையும் நமது எண்ணங்களின் மீதான ஆதிக்கம் இல்லாமல் போவதை உணரலாம்
எண்ணங்கள் ஒடுங்கிய பிறகு இருக்கும் அந்த விழிப்புணர்வு நிலை மிக குறைந்த நேரம் நம்மிடம் வருவதை உணர முடிகிறது இதுதான் சாய்ஸ்லெஸ் அவார்னெஸ் என ஜிட்டுவால் சொல்லப்படுகிறது என கருதுகிறேன்
எண்ணங்கள் ஒடுங்கிய பிறகு மனதை எதோ ஒன்று கவனிக்கிறது ஒரு சில எண்ணங்கள் இன்னும் இருப்பதை அறிய முடிகிறது ஆனால் அவை முழுமை பெற முடியாமல் தண்ணீரில் மேல் போட்ட கோலம் போல அழிந்து போய்விட்டது அகந்தை இல்லை
கவனிப்பு மட்டும் தொடர்கிறது ஆனால் அது காற்றில் ஆடாமல் இருக்கும் ஒரு மெழுகு தீபம் போல மிக சில மணித்துளிகள் இருப்பதே அபூர்வம்
மேலும் தொடர்ந்து பயிற்சி செய்தால் நிற்க செய்யலாம் போல

18.04.2016

No comments:

Post a Comment