Thursday 7 April 2016

எனது டைரி 25.03.2016

மாயை என்கிறோமே அந்த மாயை என்பதுதான் என்ன நமது மனம்தானே அது நாமே நமக்கு ஏற்படும் எண்ணங்களில் இருந்து விடுபட முடியவில்லை என்றால் நம்மை யார்தான் காப்பாற்ற இயலும்
மேல் மனம் ஆழ் மனம் என்கிற இரண்டு விதமான மனமாக ஒரு பேச்சுக்கு அதை பிடித்து பார்த்தால்
ஆழ்மனதின் வெளிப்பாடுதான் நமது சிந்தனை பேச்சு செயல் எல்லாமே
இந்த ஆழ்மனம் என்பது வேறொன்றும் அல்ல நமது நனவு மனதின் சில விசயங்கள் பதிந்து போய் அழுத்தமான
விசயமாக ஆழ்மனதில் பதிவு பெற்று விடுகிறது அந்த ஆழ்மனதின் கட்டளைகளை நமது மேல் மனம் விழிப்பின்றி பின்பற்றுகிறது
தொடர் தியானத்தின் மூலம் ஆழ்மனதை கண்ரோலுக்கு கொண்டு வரலாம்
ஆழ்மனதை நாம் பார்க்க பார்க்க நம்மை வெளியே பார்ப்பவர்கள் கொஞ்சம் வித்தியாசமாக ஆனால் நீண்ட நேரம் பார்த்து கொண்டே இருப்பார்கள்
ஏனெனில் ரொம்ப ஆழ்மனது என்பது அவர்கள் மனதை தொடும் இடங்களும் இருப்பதால் தான்
யேசுராஜன்
25.03.2016

No comments:

Post a Comment