Saturday 19 September 2015

விநாயகர் சதுர்த்தி எரிச்சலை கிளப்பும் விசயம் என்ன?

விநாயகர் என்ற கடவுளை வணங்குகிறார்கள் நாம் எப்படி யேசுகிறித்துவை வணங்குகிறோமோ அப்படியே அவரும் வணக்கத்துக்கு உரிய கடவுள் .

ஆனால் நேற்று எங்கள் பகுதியில் தாரை தப்பட்டைகள் ஒலி எழுப்பினார்கல் எத்தனை மணிக்கு தெரியுமா?

இரவு 10.30 மணிக்கு

அருகில் இருக்கும் பச்சிளம் குழந்தைகளை கொண்ட வீடுகள் பெரியவர்கள் நோயாளிகள் இவர்கள் எல்லாம் எப்படி தூங்குவார்கள் .

இந்து பெருமக்களே - அமைதியின் வடிவமான விநாயகரை வைத்து இவர்கள் அடிக்கும் கூத்தை கண்டிக்காமல் இருந்து மாபெரும் வரலாற்று தவறை செய்கிறீர்கள்

Thursday 17 September 2015

விநாயகர் சதுர்த்தியும் மக்களிடையே விரோதமும்



விநாயகர் சதுர்த்தியும் மக்களிடையே விரோதமும்

மக்கள் விழித்து கொள்ள கூடாது அவர்கள் விழித்து கொண்டால் நாட்டில் நடக்கும் லஞ்சம் ஊழல் போன்ற விசயங்களை கேள்வி கேட்க ஆரம்பித்து விடுவார்கள் மேலும் நாம் மக்களிடம் என்ன சொல்லு ஓட்டு வாங்குவது ஆகவே சும்மா இருந்த பிள்ளையார் சாமியை எடுத்து ஊர்வலமாக கொண்டு செல்வது என தீர்மானித்தார்கள் இந்த இந்துமுன்னனியினர் ஆர் எஸ் எஸ் .

கிறித்துவர்களும் எப்போதாவது ஊர்வலம் நடத்துவார்கள் ஆனால் வேண்டுமென்றே இந்த பாதையில் போலீஸ் செல்ல கூடாது என்றால் அந்த பாதையில் செல்ல மாட்டார்கள் அதுவும் கிறித்தவ ஊர்வலங்கள் ரொம்ப குறைவு .

ஆனால் மிக மிக அமைதியான கடவுளான மக்களின் எளிமையான கடவுளான இந்த விநாயகரை வைத்து மக்களிடம் பிரிவினை வாதம் தூண்ட வருகிறார்கள்
மக்களை உங்கள் முன் வருவது விநாயகர் சிலைகள் அல்ல ஓட்டு கேட்கும் இந்து கட்சியினர் என்பதை மறவாதீர்கள்
மத ஒற்றுமை காக்க மத வேற்றுமை வாதிகளிடம் இருந்து விலகுவோம்



சாதி ஆதரவுக்கு எதிராக யேசுவின் பதில்

திரு பெருமாள் தேவன் இந்த அன்பர் ஒரு சாதியை அடையாளமாக காட்டிவருபவர் - அதாவது தான் இந்த சாதி அப்படின்னு பெரிய படம் போட்டு பிளாக்கில் உக்கார்ந்து இருப்பவர்

முக்குலத்தோரே உலகின் முதலில் தோன்றியவர்கள் ?

என சொல்லி வருகிறார் http://perumalthevan.blogspot.in/2012/12/blog-post_27.html

இதில் http://perumalthevan.blogspot.in/2013/04/blog-post.html

முக்குலத்தோர்களே முதல் தமிழர் - மரபணு சோதனை ஆய்வு 

என்று ஒரு பதிவை போட்டு வைச்சிருக்காரு 

இதில் பல கேள்விகள் கேட்கபட்டு இருக்கிறது அதெற்கெல்லாம் அண்ணன் பதில் சொல்லவில்லை 

 

அதாவது மரபணு சோதனையில்

 

 //கள்ளர் இனத்தில் ஒரு சிலருக்கே m130 dnaஉள்ளது. மூன்று தனி குலத்திற்கும் அந்த m130 dna உள்ளது என்று யாரும் சொல்லவில்லை.கள்ளர்களுக்கு உள்ளது போல் மதுரை யாதவர்களுக்கும் சௌரஷ்டினருக்கும் அந்த m130 dna உள்ளது./

 இந்த கமெண்டை படித்தால் சில சாதிகளுக்கு  எம் 130 a என்ற மரபணு இருக்கு அதில ஒரு சாதி அய்யா பெருமாள் தேவன் சாதி உடனே 

உலகத்திலேயே நாங்கள்தான் தோன்றினோம்னு சொல்வது எப்படி அறிவுபூர்வமாக பொருந்தும் 

அடுத்து இவர் சாதி மோதலை நிறுத்துகிறாராம் அது எப்படின்னு பார்கனும் 

இந்த பதிவு அவரே யேசுமீதான கேள்விகளை அடுக்கியதால் அவருடைய வலைப்பூவை தேடி சென்று நாம் ஆராய்ந்து போது கண்டெடுத்த முத்துகளை கவர்ந்து வந்து அவரது புகழை பரப்ப எழுதினேன்

அன்பரே எந்த சாதியும் உயர்ந்தது தாழ்ந்தது இல்லை 

மற்றவர்களுக்கு கொடுப்பவரே உயர்ந்தவர் 

இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தார்னு 

அவ்வையார் சொல்லி இருக்காங்க 

 

Tuesday 15 September 2015

யேசுராஜன் யார்?

இணையத்தில் நீண்ட நாட்களாக இருக்கும் எனக்கு மதங்களின் பெயரால் நடக்கும் சண்டைகள் மிகவும் கடுப்பேற்றும் விசயமாகும் .

நான் யேசுராஜன் எனது ஊர் திருச்சி ஆனால் முழு விலாசமும் அறிய தரவேண்டும் என்றால் அவர் எனது நண்பராக இருப்பின் தருவேன்

மேலும் சாதி மத துவேசங்களை வளர்ப்பவர்களை இனங்கண்டு மிக சாதாரணமாக உரையாடினாலே அவர்களுக்குள் இருக்கும் வன்முறையை வெளியே கொண்டு வரமுடியும்

நான் கிறித்துவத்தை ஆதரிக்கிறேன் ஆனால் கிறித்து பெயரால் நடக்கும் மதமாற்றம் மற்றும் நாடுகளை ஒடுக்குதலை கண்டிக்கிறேன்

என்னுடன் பேச : yesurajantpr@gmail.com என்ற முகவரிக்கு மடலிடவும்