Thursday 26 May 2016

மனம் எனும் மந்திரம் 26.05.2016


மனம் ஒரு அற்புத கருவி , ஆனால் அதன் ஆழம் எத்தனை வசீகரம் என்ன என்னவெல்லாம் மனதை கொண்டு செய்யலாம் என்பதை நாம் அறிய மாட்டோம்
மனசு சரியில்லை என்பார்கள் மனம்மகிழ்ச்சி என்பார்கள்
சில நேரம் காரணம் வெளியே தெரியும் பல நேரங்களில் வெளியே தெரியாது

சிக்மண்ட் பிராய்டின் ஆராய்ச்சி என்பது மனதை பல பகுதிகளாக பிரித்து ஆய்ந்து செல்கிறது
சப்காண்சியஸ் மைண்ட் தான் நமது முழு வாழ்வையும் நடத்தி செல்கிறது தெரியுமா எத்தனை பேருக்கு தெரியுமோ அறியேன்
அந்த ஆழ்மனதை கண்ரோலில் எடுக்க நாம் வெளி மனதில் இருந்து ஆரம்பிக்கிறோம்
அதாவது கலங்கிய குளத்தை கொஞ்ச நேரம் கலங்காமல் வைத்து விட்டு ஆற்றுக்குள் மெல்ல இறங்கி
அடி ஆழத்தில் என்ன இருக்கிறதென்று பார்க்க போகிறோம்
அதுதான் தியானம்
ஆழத்தில் ஊடுருவி பார்க்க இயலாதவர்கள் குருவின் துணையை நாடலாம் குருன்னா சாமியார்கள் இல்லை
இறைவனே நமது குரு நாதன்
அவரை வேண்டி அமைதியாக தியானத்துள் போக போக விசயங்கள் முடிச்சை அவிழ்த்து
நம் முன் நிற்கின்றன
நாம் யார் மனதை இயக்குவது எது கடவுள் எங்கிருக்கிறார் இதெல்லாம் சொன்னா புரியும்மா
இல்லை புரியாது சொல்லவும் முடியாது உள்ளே செல்லனும் சூட்சுமமா சமைந்திருக்கும் அந்த பரம் பொருளை பார்க்கனும் அதனுடன் ஒன்றாகனும் என்றால் தியானம் செய்யனும்

26.05.2016

Sunday 22 May 2016

எனது டைரி 23052016

கடந்த சில நாட்களாக பயிற்சி சரிவர செய்யவில்லை ஆனாலும் எண்ணங்களின் ஒழுங்க அவை எப்படி உருவம் பெற்று உணர்வுகளை தீண்டி ரியாக்கசன் செய்ய வைக்கிறது என்பதை நிதானமாக பார்க்க முடிகிறது .
ஆனால் இன்னும் கண்ட்ரோல் செய்ய முடியவில்லை . அதற்கு இன்னும் நிறைய மன ஆற்றல் தேவை படுகிறது
இந்த மன ஆற்றலும் மனதிலேயே தான் இருக்கிறது . மன ஆற்றலை விரும்பிய திசையில் செலுத்த இன்னும் கொஞ்சம் பயிற்சி தேவை படுகிறது .
நேற்று அப்பியாசி மீட்டிங் நடை பெற்றது அதில் பேசும்படி சொன்னார்கள் . எனக்கு தியானம் சம்பந்த பட்ட விசயத்தில் என்னுடன் சமமாக இருப்பர்களிடம் பேசி குழப்பி கொள்ள நேற்று விருப்பம் எழவில்லை .
ஏனெனில் இது குருவின் துணையை மட்டுமே வேண்டி முன்னேறு ம் பயணம்

23.05.2016

Thursday 12 May 2016

எனது டைரி 13.05.2016

.
 
 
 
நேற்று ஒரு நாள் மட்டும் விரதம் என்ற கட்டு பாட்டு கடந்த பத்து வாரங்களாக கடைபிடித்து வருகிறேன்
இதன் பயன் உடல் ரீதியாக மட்டுமின்றி ஆன்மீக ரீதியாக உதவியதை நேற்றைய தியானத்தில் அறிந்தேன்
என்னவென்றால் , நேற்று இரவும் சரி இன்று காலையும் சரி தியானம் துல்லியமாக அமைந்ததுவியப்புக்கு உரியது
மனம் குறிப்பிட்ட புள்ளீயில் இருத்தவே எனக்கு அரை மணி நேரம் பிடிக்கும் ஆனால் மனம் தானாக குவிந்து விட்டது எண்ணங்கள் மறைந்து  வெறும் கவனிப்பு நிலை நீடித்தது காலத்தால் உணர்ந்து கொள்ள முடியாதது அந்த நிலை எப்போது மனம் வந்ததோ உடனே அந்த நிலை நீங்கியது .

13.05.2016

Tuesday 10 May 2016

எனது டைரி 10.05.2016

நல்ல மனிதன் கெட்ட மனிதன் நல்லது கெட்டது இதெல்லாம் உலகில் ஏன் இருக்கிறது
உலகம் முழுக்க நல்ல விசயங்களும் பூத்து குழுங்கும் மலர் சோலைகளும் துன்ப மில்லாத வாழ்வும் எல்லாருமே நல்லவர்களாக இருந்து விட்டால் என்ன?
ஏன் துன்ப சுமை நம்மை அழுத்து கிறது
துன்ப மற்ற இன்ப வாழ்வை நோக்கிய கனவுகள் எல்லாருக்கும் எல்லா உயிரினத்திற்கும் இருக்கும் எறும்பு கூட தன்னை மனிதர்கள் துன்புறுத்துகிறார்கள் என கடவுளிடன் தினமும் புகார் சொல்லி கொண்டே இருக்கும்
ஆனால் ஒரு கணம் ஒரே கணம் இதெல்லாம் திரையில் ஓடும் படம் என்றும்
இதெல்லாம் உண்மை இல்லை என்பதும் தெரிந்து விட்டால்
என்ன செய்வோம் எல்லாவற்றிற்கும் சிரிப்புதான் வரும் நம்மிடம் இருந்து நாமே சிரிக்கும் புத்தர்களாகிடுவோம்
நாம் கனவு காண்கிறோம் அதில் நாம் ராஜாவாக இருக்கிறோம் விழித்தெழுந்து பார்த்தால் அப்படி ஏதும் இல்லை இன்னொரு நாள் கனவு காண்கிறோம் அதில் பிச்சை காரனாக இருக்கிறோம் அதே போல விழிப்பில் அது கனவு என்று புரிகிறது .
என்ன பிரச்சனை என்றால் நாம் தினமும் தற்கொலை செய்து கொள்கிறோம் என்கிறார் ரமணர்
மாந்தர்கள் பாபிகள் என்று இயேசுகிறித்து சொல்கிறாரே என்ற கேள்விக்கு ரமணர் இவ்வாறு பதிலளித்தார்
நான் மனிதன் என நினைப்பதே மிகப்பெரிய பாவம் என்றார் .
ஆகவே நாம் காண்பது கனவு இதில் நல்ல கனவு கெட்ட கனவு சீர்திருத்தம் செய்த கனவு என்றெல்லாம் ஏதும் இல்லை

10.05.2016

Monday 9 May 2016

சோதனை மடல்

இது ஒரு சோதனை மடல் கருவி பட்டை இணைந்திருக்கிறதா என பார்க்க

ஒரு புதிய பாடம்

நீண்ட நாட்களாக டைரி எழுதாதது எனது ஒவ்வொரு நாளில் தியான அனுபவங்களை பதிவு செய்யாதது ஞாபகம் வந்தபின் இதை எழுதுகிறேன் .
திடீரென மிக அதிகமான கோபம் உணர்வு ஏற்பட்டதும் எனது பிரசெப்டரை அனுகினேன் அவரது  ஆலோசனை பேரில் நீண்ட நேரம் தியானம் செய்ய ஒத்து கொண்டபின் அந்த கோபத்தில் உணர்வு குறைய ஆரம்பித்தது
காரணம் - ஆன்மீக பயணத்தில் சில லேயர்களை கடக்கும் போது ஈகோ பாதிக்கப்படும் அதை ஏற்று கொள்ளாத ஈகோ அதை கோபமாக வெளிப்படுத்தும் என பிரசெப்டர் சொன்னது மிகவும் சரி
தினம் ஒரு கற்று கொள்ளல் என நகர்கிறது எனது பயணம் மெதுவாக


கோபம் :

பொதுவாக கோபம் நமது மனதின் மேல் தளத்திற்கு வருவது வரை நமக்கு தெரிவதில்லை ஆகவே தியானத்தின் மூலம் நமது உணர்வு நிலைக்கு வரும் முன்பு அதை உணர்ந்து கொள்ள மனம் நுட்பமாக வேண்டும் என்பதுதான் கோபத்தை கட்டு படுத்த ஒரே வழி

09.05.2016