Thursday 26 May 2016

மனம் எனும் மந்திரம் 26.05.2016


மனம் ஒரு அற்புத கருவி , ஆனால் அதன் ஆழம் எத்தனை வசீகரம் என்ன என்னவெல்லாம் மனதை கொண்டு செய்யலாம் என்பதை நாம் அறிய மாட்டோம்
மனசு சரியில்லை என்பார்கள் மனம்மகிழ்ச்சி என்பார்கள்
சில நேரம் காரணம் வெளியே தெரியும் பல நேரங்களில் வெளியே தெரியாது

சிக்மண்ட் பிராய்டின் ஆராய்ச்சி என்பது மனதை பல பகுதிகளாக பிரித்து ஆய்ந்து செல்கிறது
சப்காண்சியஸ் மைண்ட் தான் நமது முழு வாழ்வையும் நடத்தி செல்கிறது தெரியுமா எத்தனை பேருக்கு தெரியுமோ அறியேன்
அந்த ஆழ்மனதை கண்ரோலில் எடுக்க நாம் வெளி மனதில் இருந்து ஆரம்பிக்கிறோம்
அதாவது கலங்கிய குளத்தை கொஞ்ச நேரம் கலங்காமல் வைத்து விட்டு ஆற்றுக்குள் மெல்ல இறங்கி
அடி ஆழத்தில் என்ன இருக்கிறதென்று பார்க்க போகிறோம்
அதுதான் தியானம்
ஆழத்தில் ஊடுருவி பார்க்க இயலாதவர்கள் குருவின் துணையை நாடலாம் குருன்னா சாமியார்கள் இல்லை
இறைவனே நமது குரு நாதன்
அவரை வேண்டி அமைதியாக தியானத்துள் போக போக விசயங்கள் முடிச்சை அவிழ்த்து
நம் முன் நிற்கின்றன
நாம் யார் மனதை இயக்குவது எது கடவுள் எங்கிருக்கிறார் இதெல்லாம் சொன்னா புரியும்மா
இல்லை புரியாது சொல்லவும் முடியாது உள்ளே செல்லனும் சூட்சுமமா சமைந்திருக்கும் அந்த பரம் பொருளை பார்க்கனும் அதனுடன் ஒன்றாகனும் என்றால் தியானம் செய்யனும்

26.05.2016

No comments:

Post a Comment