Tuesday 10 May 2016

எனது டைரி 10.05.2016

நல்ல மனிதன் கெட்ட மனிதன் நல்லது கெட்டது இதெல்லாம் உலகில் ஏன் இருக்கிறது
உலகம் முழுக்க நல்ல விசயங்களும் பூத்து குழுங்கும் மலர் சோலைகளும் துன்ப மில்லாத வாழ்வும் எல்லாருமே நல்லவர்களாக இருந்து விட்டால் என்ன?
ஏன் துன்ப சுமை நம்மை அழுத்து கிறது
துன்ப மற்ற இன்ப வாழ்வை நோக்கிய கனவுகள் எல்லாருக்கும் எல்லா உயிரினத்திற்கும் இருக்கும் எறும்பு கூட தன்னை மனிதர்கள் துன்புறுத்துகிறார்கள் என கடவுளிடன் தினமும் புகார் சொல்லி கொண்டே இருக்கும்
ஆனால் ஒரு கணம் ஒரே கணம் இதெல்லாம் திரையில் ஓடும் படம் என்றும்
இதெல்லாம் உண்மை இல்லை என்பதும் தெரிந்து விட்டால்
என்ன செய்வோம் எல்லாவற்றிற்கும் சிரிப்புதான் வரும் நம்மிடம் இருந்து நாமே சிரிக்கும் புத்தர்களாகிடுவோம்
நாம் கனவு காண்கிறோம் அதில் நாம் ராஜாவாக இருக்கிறோம் விழித்தெழுந்து பார்த்தால் அப்படி ஏதும் இல்லை இன்னொரு நாள் கனவு காண்கிறோம் அதில் பிச்சை காரனாக இருக்கிறோம் அதே போல விழிப்பில் அது கனவு என்று புரிகிறது .
என்ன பிரச்சனை என்றால் நாம் தினமும் தற்கொலை செய்து கொள்கிறோம் என்கிறார் ரமணர்
மாந்தர்கள் பாபிகள் என்று இயேசுகிறித்து சொல்கிறாரே என்ற கேள்விக்கு ரமணர் இவ்வாறு பதிலளித்தார்
நான் மனிதன் என நினைப்பதே மிகப்பெரிய பாவம் என்றார் .
ஆகவே நாம் காண்பது கனவு இதில் நல்ல கனவு கெட்ட கனவு சீர்திருத்தம் செய்த கனவு என்றெல்லாம் ஏதும் இல்லை

10.05.2016

No comments:

Post a Comment