Tuesday 22 March 2016

எனது டைரி 22.03.2016

மாயை தியான வாழ்வை ஒவ்வொரு கனமும் அடித்து நொறுக்க பார்க்கிறது விழிப்புற்ற மனம் அதை உணரமுடியும் ஆனால் இந்த விழிப்பு நிலை பல படித்தரம் உடையது ஆழ் மனதில் ஏற்படும் கோபமோ காமமோ ஆசையோ மேல் மனதில் உணரப்படும் வரை சிலருக்கு தெரிவதில்லை
ஆனால் சம்ஸ்காரங்களை அசைவை கூட கண்டறிய கூடிய யோகி அதை அறிந்து அந்த எண்ணத்தை நசுக்கி போடுகிறான்
ஆனால் விழுந்தாலும் எழுந்து நின்று போராடு என்கிறார் எனது குரு
ஒவ்வொரு தரம் விழும் போதும் நமக்கு படிப்பினை கிடைக்கிறது எழுவதற்கு ஊக்கம் கிடைக்கிறது குருவருள் கிடைக்கிறது என்பதுதான் கடவுளின் கருணை
பாசாங்கு செய்யும் இந்த கள்ள மனம் சொல்கிறது இன்றைக்கு விடுப்பு எடுத்து விடலாம் தியானம் செய்யாமல் என சொல்கிறது அல்லது வேறு கேளிக்கைகளில் மனதை செலுத்துகிறது
உடனே ஆத்ம விசாரம் என்ற ஆயுதத்தை எடுக்கனும் தொடர்ந்து அந்த பாசாங்கை விரட்டனும்
இது கோட்டைக்குள் இருக்கும் ஒவ்வொரு எதிரியும் வெளியே வரும் வரை தொடரனும்

22.03.2016
என்

எனது டைரி 21.03.2016

என்னதான் அமைதியாக இருக்க நினைத்தாலும் மரத்தை காற்று விடுவதில்லை அசைக்கிறது அசைத்து அசைத்து அதை வேறோரு பிடிங்கு எறிந்துவிட முனைகிறது
ஆனால் மரம் ஒரு நெகிழ்வு தன்மையோடு காற்றுடன் போராடினால் உடையாது தப்பிக்கிறது
அந்த காற்று சென்று வர மரத்தில் சில துளைகளை இடுகிறோம்
ஒரு இசை பிறக்கிறது அந்த இசையை கண்டு காற்றே அசந்து போகிறது இவன் யாரோ வித்தை காரன் என ஸ்தம்பிக்கிறது
எதார்த்த வாழ்வு எதார்த்த சிந்தனை எதார்த்த பேச்சு எந்தெல்லாம் வெகுளித்தனம் என கேள்வி பட்டு இருக்கிறேன் ஆனால் இந்த உலகத்தில் மூங்கில் மரம்போல  இசைவோடுவும் அதை வெளியே தள்ள நம்மிடம் துளைகளோடும்
இருந்து விட்டால் காற்றால் நமக்கு பேரிடைஞ்சல் இல்லை
காற்றை இழு உள்வாங்கு அதை கவனி பிறகு கவனிக்காதே  இதோ அது
என்னை எதுவும் செய்ய முடியாமல் கையை பிசைகிறது
யேசுராஜன்

21.03.2016

Saturday 19 March 2016

எனது டைரி 19.03.2016

எனது எழுத்துக்கள் எங்கும் யாராலும் மட்டறுத்தவோ தடை செய்ய படவோ கூடாது என நினைக்கிறேன் அப்படி பயந்து கொண்டு ஏன் எழுதவேண்டும்

யாரோ ஒரு சிலர் படித்தாலும் அதனால் என்ன ? எண்ணிக்கையில் நிறைய பேர் படிப்பது குமுதம் பத்திரிக்கைதான்

எண்ணிக்கை குறைவு என்பதெல்லாம் பிரச்சனை இல்லை

எனது டைரியை படிப்பவர்கள் இங்கேயே கருத்தை சொல்லுங்கள்

தியானம் தொடர்கிறது , குறிப்பிடத தக்க முன்னேற்றங்கள் இருக்கின்றன ஆனால் அவற்றை எப்படி குறிப்பிடுவது என தெரியவில்லை

நான் ஆத்மா என்கிற நினைப்புக்கும் உண்மையில் நான் ஆத்மா என்பதற்கும் பாரிய வேறுபாடுகள் உள்ளன என்பதை உணர்கிறேன்

தொடருவோம்

19.03.2016

Wednesday 16 March 2016

எனது டைரி 21.01.2016

இந்த சில நாட்கள் நான் டைரி எழுதவில்லை என்பது வருத்தமான விசயமே
ஏனெனில் நான் தியானமும் அரைகுறையாகவே செய்கிறேன்
தியானத்தின் அருமை அதை செய்யாத நாட்களில்தெரிகிறது


யேசுராஜன்
21.01.2016

எனது டைரி 18.01.2016

எதையுமே அளவா செய்யனும் என்பது எனக்கு புரிந்தது தை பொங்கல் முடிந்ததுதாம்
சும்மாதானே இருக்கிறோம் என நினைத்து உடலை பலப்படுத்துகிறேன்னு அதிகமா எக்செர் சைஸ் செய்தேன்
வழக்கமா 20 தண்டால் எடுப்பேன் அன்னைக்கு 60 எடுத்தேன் பிறகு பஸ்கி  ,ஆம்ஸ் பயிற்சிகள் எடுத்து விட்டு
சாப்பிட்டு தூங்கி எழுந்ததும் காய்ச்சல் வந்ததுதான் மிச்சம்

யேசுராஜன்

18.01.2016

எனது டைரி 11.01.2016

தியான வாழ்வு என்பது நடைமுறை அலைகள் நிறைந்த மனதுடன் நடக்கும் போராகும்
அலைகள் அமைதியானபின் மனதை பார்பதே ஒரு இன்பமான காட்சி
நான் மட்டுமே இருப்பதும் வேறு எந்த எண்ணமும் வராமல் இருப்பதும் ஒரு சில நொடிகள் அமைவதற்கு
ஒரு மணி நேரம் தியானம் செய்தாக வேண்டும்
பிறகு மனதுக்குள் அலை அலையாக இன்ப உணர்வு பெருக்கெடுக்கும்

யேசுராஜன்
11.01.2016

எனது டைரி 03.01.2016

ஆன்மீகம் என்பது முற்றிலும் ரகசியமானது என்கிறார்கள் ஆனால் அது ஏட்டளவில் படிப்பதற்கும் விவாதிப்பதற்கும் உண்டான விசயமல்ல
முதலில் பயிற்சி அல்லது நடைமுறை எப்போதாவது பேச்சு இதான் ஆன்மீகம் என்பது தாழ்மையான எனது கருத்து

தியானம் என்பது பற்றி சுமார் 1000 புத்தகம் தமிழில் எழுத பட்டிருக்கலாம் ஆனால் இதையெல்லாம் படித்தால் தியானம் செய்யவே முடியாது
சுமார் 200 மணி நேரங்கள் தன் வாழ்வில் தியானம் செய்து பார்க்காத யாரும் தியானத்தின் வாசலில் நுழைய வே முடியாது
சரி
மனதை துரியத்தில் நிலைப்படுத்துவதில் ஒரு நல்ல விளைவு ஏற்பட்டது
வேலைகளை அதீத சுறுசுறுப்புடன் செய்கிறேன்
யேசுராஜன்

எனது டைரி 31.12.2015

நண்பருடன் பேசிக்கொண்டிருக்கையில் சில கவிதைகள் தோன்றியது

நான் யாரென்று நீ நினைக்கிறாய் ,
 ஜன்னல் ஓரத்தில் செல்லும் நிலா ,
 மாடியில் உதிக்கும் சூரியன் ,
சுண்டல் விற்கும் யாரோ ஒருவன் ,
எந்த நோக்கமும் இன்றி வீசும் காற்று
எந்த முகவரியும் இல்லாத
தேவைபடாத மனிதன் நான்
முகவரிகளை எனக்கு பொருத்தாதே
வேண்டுமானால்
 என்னை அழைத்து கொள் அட அசடேன்னு
 என் அம்மாவின் விழித்தல் அது

-யேசுராஜன்

எனது டைரி 28.12.2015

நெற்றில்யில் ஏற்றி வைக்கப்பட்ட அந்த உணர்வு அதாவது குண்டலினி சக்தி துரிய நிலைக்கு உயர்த்தப்பட்டது (27/12/2015)
என்னுடன் சுமார் 35 பேர் இந்த தீட்சை எடுத்து கொண்டார்கள் தலையில் மேல்பகுதியில் ஏற்கனவே தீட்சை வாங்கிய மூத்த சாதகர்கள் தொட்டு உணர்த்தி காண்பித்தார்கள்
இதன் மூலம் - அடுத்த கட்ட தியானத்தை நோக்கி நகர்கிறேன்
இந்த தியானத்தின் மூலம் வினை பதிவுகள் அழியுமாம்

எளியமுறை குண்டலினி யோகப் பயிற்சியில் ஒன்பது தவமுறைகள் உள்ளன.
1. ஆக்கினைத் தவம் 2. சாந்தி தவம் 3. துரிய தவம் 4. துரியாதீதத் தவம் 5. பஞ்சேந்திரிய தவம் 6. பஞ்சபூத நவக்கிரகத் தவம் 7. ஒன்பது மையத் தவம் 8. நித்தியானந்த தவம் 9. இறைநிலைத் தவம் Copy the BEST Traders and Make Money : http://bit.ly/fxzulu

Copy the BEST Traders and Make Money : http://bit.ly/fxzulu
நான் மூன்றாவது படியை செய்து கொண்டு இருக்கிறேன்
யேசுராஜன்

எனது டைரி 25.12.2016

தொடர்சியாக மனதை குவிய செய்வதில் வெற்றி பெற்றேன் என சொல்ல முடியாது 
ஆனால் ஒரு புள்ளியை சுமார் ஒரு மணி நேரம் சுற்றி வர மனம் பழகி கொண்டது
அதன் ஒரு புள்ளியில் அது லயிக்கும் போது ஒரு சந்தோசம் மனதில் நிறைகிறது
முகத்தில் அந்த அமைதியில் சாயல் எதோ தெரியும் போல
எந்த பிரச்சனை வந்தாலும் உங்கள் முகம் வாடாமல் இருக்கிறதே என
நண்பர்கள் கேட்டு விட்டார்கள்
இந்தியாவின் கலை தியானம் வாழ்க

Monday 14 March 2016

அறிந்ததினின்றும் விடுதலை -ஜிட்டு கிருஸ்ணமூர்த்தி

அறிந்ததினின்றும் விடுதலை
மனிதன் ஆண்டாண்டு காலமாக தனக்கு அப்பாற்பட்ட ,பொருளாதாய வாழ்வுக்கு அப்பாற்பட்ட ஏதோ ஒன்றை தேடிக்கொண்டே வந்துள்ளான் .
அவற்றை நாம் இப்படி அழைக்கிறோம் கடவுள் , அல்லது உண்மை அல்லது காலம் கடந்த நிலை –எண்ணத்தாலோ சூழலால் தாக்கப்படாத மாறுபடாத நிலை .

மனிதன் எப்போதுமே கேட்டுவந்துள்ள கேள்விகள் .இதெல்லாம் எதற்காக ? இந்த வாழ்வில் ஏதேனும் அர்த்தம் உள்ளதா? . வாழ்வில் மிக அதிக குழப்பத்தை அல்லது குழம்பி போன நிலை, மிருகத்தனமான போர்கள் ,கிளர்ச்சிகள், முடிவற்ற பிரிவுகள் கொண்டுள்ள மதம்,லட்சியங்கள் மற்றும் தேசாபிமானம் .மிக ஆழ்ந்த நுண்ணுணர்வுடன் இதை உணர்ந்து இந்த கேள்வியை கேட்கிறான் . ஒரு மனிதன் என்ன செய்யவேண்டும் . வாழ்க்கை என நாம் அழைப்பதற்கு பொருள்தான் என்ன?  இந்த வாழ்வுக்கு மேற்பட்டு எதாவது உள்ளதா?
ஆயிரம் பெயர்கள் கொண்ட அந்த பெயரற்ற ஒன்றை கண்டறிய முயன்றிருக்கிறான் . ஒரு மீட்பரின் மேலோ அல்லது லட்சியத்தின் மீதோ நம்பிக்கையை வளர்த்து வந்துள்ளான் ஆனால் நம்பிக்கை தவிர்க்க முடியாமல் வன்முறையை வளர்க்கிறது.

பல நூற்றாண்டுகளாக நாமெல்லாம் நமது ஆசிரியர்கள் ,மற்றும் மகான்கள் , புத்தகங்களால் ஊட்டி ஊட்டி வளர்க்கப்பட்டிருக்கிறோம். நாம் இந்த மலைகளுக்கும் கடலுக்கும் அப்பால் மேலும் இந்த பூமிக்கு அப்பால் என்ன இருக்கிறது என்று கேட்டால் அவர்கள் தரும் விளக்கங்களை கேட்டு நாம் திருப்தியடைகிறோம் அதாவது நாம் வார்த்தைகளில் வாழ்கிறோம் நமது வாழ்க்கை; ஆழமற்றதாகவும் ஒரு காலி டப்பாவாக இருக்கிறது. நாம் இரண்டாந்தர மனிதர்கள் (second hand people). நாம் வாழ்வது நமக்கு என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ அதை பற்றிகொண்டு குறுகிய வரையறுக்கப்பட்ட ஒரு வாழ்க்கைமுறை ,ஒரு குறிப்பிட்ட சமூகத்தால் வற்புறுத்தி ஏற்றுகொள்ள செய்யப்பட்ட வாழ்முறையில் வாழ்ந்து வருகிறோம்.
நாம் என்பது அனைத்து வகையான நம்பிக்கைகள் கருத்துக்களின் விளைவு தானே தவிர நம்மிடம் புதுமையானதென்று ஏதுமில்லை ,நாமே கண்டறிந்தது ஒரிஜினலானது என்று ஏதுமில்லை நம்மிடம்.

யாலாஜிகல் சொசைட்டியின் ஆன்மீக தலைவர்கள் மூலம் நாம் இன்னின்ன
சடங்குகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் சில மந்திரங்களை திருப்பி திருப்பி சொல்ல வேண்டும் என்றும் பிராத்தனைகளை தொடர்ந்து செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளோம் ,நமது இயற்க்கை உந்துதல்கள் அதனால் ஏற்படும் ஆசைகள் ,காமம் ஆகியவற்றை அடக்கி ஒடுக்கவேண்டும் என ஆண்டாண்டுகாலமாக கற்பிக்கப்பட்டுள்ளது . பொதுமான அடக்குமுறையை மனமும் உடலும் அடைந்த பிறகு நாம் இந்த சின்னஞ்சிறிய வாழ்க்கைக்கு மேலுள்ள ஒன்றை அடைவோம் என சொல்லப்படுகிறது . இதைத்தான் மில்லியன்கணக்கான ஆன்மீக வாதிகள் என்றழைக்கப்பட்டவர்கள் பல தலைமுறைகளாக செய்திருக்கிறார்கள். காடுகளுக்கு ஓடிவிடுவதோ அல்லது சின்ன திருவோட்டை ஏந்தி பிச்சை எடுத்து வாழ்வதோ அவர்களது வாழ்க்கை முறையாக உண்மையை தேட, சாமியார் மடங்களில் சேர்ந்து விடுவதோ அல்லது ஒரு குரூப்பாக சேர்ந்து தமது மனதை ஒரு குறிப்பிட்ட சட்டதிட்ட முள்ள வாழ்க்கைக்கு பழக்கப்படுத்தி கொள்ளவோ செய்கிறார்கள். ஆனால் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட மனம் ஒரு உடைந்துபோன மனமாகும் எது வெளி உலகத்தை வேண்டாம் என்று ஒதுக்கி மிகவும் சோர்வடைந்த மனம்(which has denied the outer world and been made dull
through dis- cipline and conformity -) எவ்வளவுதான் புனிதமடைந்ததாக காட்டி கொண்டாலும் அது உண்மையை அதற்குரிய வழியில் (உடைந்து போனதை போலவே) காணும் .( however long it
seeks, will find only according to its own distortion.)