மாயை தியான வாழ்வை ஒவ்வொரு கனமும் அடித்து
நொறுக்க பார்க்கிறது விழிப்புற்ற மனம் அதை உணரமுடியும் ஆனால் இந்த விழிப்பு
நிலை பல படித்தரம் உடையது ஆழ் மனதில் ஏற்படும் கோபமோ காமமோ ஆசையோ மேல்
மனதில் உணரப்படும் வரை சிலருக்கு தெரிவதில்லை
ஆனால் சம்ஸ்காரங்களை அசைவை கூட கண்டறிய கூடிய யோகி அதை அறிந்து அந்த எண்ணத்தை நசுக்கி போடுகிறான்
ஆனால் விழுந்தாலும் எழுந்து நின்று போராடு என்கிறார் எனது குரு
ஒவ்வொரு
தரம் விழும் போதும் நமக்கு படிப்பினை கிடைக்கிறது எழுவதற்கு ஊக்கம்
கிடைக்கிறது குருவருள் கிடைக்கிறது என்பதுதான் கடவுளின் கருணை
பாசாங்கு
செய்யும் இந்த கள்ள மனம் சொல்கிறது இன்றைக்கு விடுப்பு எடுத்து விடலாம்
தியானம் செய்யாமல் என சொல்கிறது அல்லது வேறு கேளிக்கைகளில் மனதை
செலுத்துகிறது
உடனே ஆத்ம விசாரம் என்ற ஆயுதத்தை எடுக்கனும் தொடர்ந்து அந்த பாசாங்கை விரட்டனும்
இது கோட்டைக்குள் இருக்கும் ஒவ்வொரு எதிரியும் வெளியே வரும் வரை தொடரனும்
22.03.2016
என்
No comments:
Post a Comment