Monday 14 March 2016

அறிந்ததினின்றும் விடுதலை -ஜிட்டு கிருஸ்ணமூர்த்தி

அறிந்ததினின்றும் விடுதலை
மனிதன் ஆண்டாண்டு காலமாக தனக்கு அப்பாற்பட்ட ,பொருளாதாய வாழ்வுக்கு அப்பாற்பட்ட ஏதோ ஒன்றை தேடிக்கொண்டே வந்துள்ளான் .
அவற்றை நாம் இப்படி அழைக்கிறோம் கடவுள் , அல்லது உண்மை அல்லது காலம் கடந்த நிலை –எண்ணத்தாலோ சூழலால் தாக்கப்படாத மாறுபடாத நிலை .

மனிதன் எப்போதுமே கேட்டுவந்துள்ள கேள்விகள் .இதெல்லாம் எதற்காக ? இந்த வாழ்வில் ஏதேனும் அர்த்தம் உள்ளதா? . வாழ்வில் மிக அதிக குழப்பத்தை அல்லது குழம்பி போன நிலை, மிருகத்தனமான போர்கள் ,கிளர்ச்சிகள், முடிவற்ற பிரிவுகள் கொண்டுள்ள மதம்,லட்சியங்கள் மற்றும் தேசாபிமானம் .மிக ஆழ்ந்த நுண்ணுணர்வுடன் இதை உணர்ந்து இந்த கேள்வியை கேட்கிறான் . ஒரு மனிதன் என்ன செய்யவேண்டும் . வாழ்க்கை என நாம் அழைப்பதற்கு பொருள்தான் என்ன?  இந்த வாழ்வுக்கு மேற்பட்டு எதாவது உள்ளதா?
ஆயிரம் பெயர்கள் கொண்ட அந்த பெயரற்ற ஒன்றை கண்டறிய முயன்றிருக்கிறான் . ஒரு மீட்பரின் மேலோ அல்லது லட்சியத்தின் மீதோ நம்பிக்கையை வளர்த்து வந்துள்ளான் ஆனால் நம்பிக்கை தவிர்க்க முடியாமல் வன்முறையை வளர்க்கிறது.

பல நூற்றாண்டுகளாக நாமெல்லாம் நமது ஆசிரியர்கள் ,மற்றும் மகான்கள் , புத்தகங்களால் ஊட்டி ஊட்டி வளர்க்கப்பட்டிருக்கிறோம். நாம் இந்த மலைகளுக்கும் கடலுக்கும் அப்பால் மேலும் இந்த பூமிக்கு அப்பால் என்ன இருக்கிறது என்று கேட்டால் அவர்கள் தரும் விளக்கங்களை கேட்டு நாம் திருப்தியடைகிறோம் அதாவது நாம் வார்த்தைகளில் வாழ்கிறோம் நமது வாழ்க்கை; ஆழமற்றதாகவும் ஒரு காலி டப்பாவாக இருக்கிறது. நாம் இரண்டாந்தர மனிதர்கள் (second hand people). நாம் வாழ்வது நமக்கு என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ அதை பற்றிகொண்டு குறுகிய வரையறுக்கப்பட்ட ஒரு வாழ்க்கைமுறை ,ஒரு குறிப்பிட்ட சமூகத்தால் வற்புறுத்தி ஏற்றுகொள்ள செய்யப்பட்ட வாழ்முறையில் வாழ்ந்து வருகிறோம்.
நாம் என்பது அனைத்து வகையான நம்பிக்கைகள் கருத்துக்களின் விளைவு தானே தவிர நம்மிடம் புதுமையானதென்று ஏதுமில்லை ,நாமே கண்டறிந்தது ஒரிஜினலானது என்று ஏதுமில்லை நம்மிடம்.

யாலாஜிகல் சொசைட்டியின் ஆன்மீக தலைவர்கள் மூலம் நாம் இன்னின்ன
சடங்குகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் சில மந்திரங்களை திருப்பி திருப்பி சொல்ல வேண்டும் என்றும் பிராத்தனைகளை தொடர்ந்து செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளோம் ,நமது இயற்க்கை உந்துதல்கள் அதனால் ஏற்படும் ஆசைகள் ,காமம் ஆகியவற்றை அடக்கி ஒடுக்கவேண்டும் என ஆண்டாண்டுகாலமாக கற்பிக்கப்பட்டுள்ளது . பொதுமான அடக்குமுறையை மனமும் உடலும் அடைந்த பிறகு நாம் இந்த சின்னஞ்சிறிய வாழ்க்கைக்கு மேலுள்ள ஒன்றை அடைவோம் என சொல்லப்படுகிறது . இதைத்தான் மில்லியன்கணக்கான ஆன்மீக வாதிகள் என்றழைக்கப்பட்டவர்கள் பல தலைமுறைகளாக செய்திருக்கிறார்கள். காடுகளுக்கு ஓடிவிடுவதோ அல்லது சின்ன திருவோட்டை ஏந்தி பிச்சை எடுத்து வாழ்வதோ அவர்களது வாழ்க்கை முறையாக உண்மையை தேட, சாமியார் மடங்களில் சேர்ந்து விடுவதோ அல்லது ஒரு குரூப்பாக சேர்ந்து தமது மனதை ஒரு குறிப்பிட்ட சட்டதிட்ட முள்ள வாழ்க்கைக்கு பழக்கப்படுத்தி கொள்ளவோ செய்கிறார்கள். ஆனால் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட மனம் ஒரு உடைந்துபோன மனமாகும் எது வெளி உலகத்தை வேண்டாம் என்று ஒதுக்கி மிகவும் சோர்வடைந்த மனம்(which has denied the outer world and been made dull
through dis- cipline and conformity -) எவ்வளவுதான் புனிதமடைந்ததாக காட்டி கொண்டாலும் அது உண்மையை அதற்குரிய வழியில் (உடைந்து போனதை போலவே) காணும் .( however long it
seeks, will find only according to its own distortion.)

No comments:

Post a Comment