Tuesday 22 March 2016

எனது டைரி 21.03.2016

என்னதான் அமைதியாக இருக்க நினைத்தாலும் மரத்தை காற்று விடுவதில்லை அசைக்கிறது அசைத்து அசைத்து அதை வேறோரு பிடிங்கு எறிந்துவிட முனைகிறது
ஆனால் மரம் ஒரு நெகிழ்வு தன்மையோடு காற்றுடன் போராடினால் உடையாது தப்பிக்கிறது
அந்த காற்று சென்று வர மரத்தில் சில துளைகளை இடுகிறோம்
ஒரு இசை பிறக்கிறது அந்த இசையை கண்டு காற்றே அசந்து போகிறது இவன் யாரோ வித்தை காரன் என ஸ்தம்பிக்கிறது
எதார்த்த வாழ்வு எதார்த்த சிந்தனை எதார்த்த பேச்சு எந்தெல்லாம் வெகுளித்தனம் என கேள்வி பட்டு இருக்கிறேன் ஆனால் இந்த உலகத்தில் மூங்கில் மரம்போல  இசைவோடுவும் அதை வெளியே தள்ள நம்மிடம் துளைகளோடும்
இருந்து விட்டால் காற்றால் நமக்கு பேரிடைஞ்சல் இல்லை
காற்றை இழு உள்வாங்கு அதை கவனி பிறகு கவனிக்காதே  இதோ அது
என்னை எதுவும் செய்ய முடியாமல் கையை பிசைகிறது
யேசுராஜன்

21.03.2016

No comments:

Post a Comment