Monday 15 February 2016

தமிழ் எதிர்பாளருக்கு கண்டனம்

மிஸ்டர் ஐயப்பன் தாங்கள் தவறுதலாக இங்கே மின் தமிழில் வந்து பேசிக்கொண்டு இருக்கிறீர்கள் என நினைக்கிறேன்
தமிழனை தாக்கி பேசியது நீங்கள் என்று சொல்லவில்லை மேலும் பண்புடன் குழுமத்தையே நான் மறந்து விட்டேன்
நீங்கள் அங்கே என்ன எழுதினாலும் எனக்கு வராது மேலும்
உங்களுக்கு பதிலளித்து கொண்டிருக்கவெல்லாம் எனக்கு நேரமில்லை  பொதுவாக
தமிழனை தாழ்த்தி பேசும் யாராக இருந்தாலும் இந்த மடல் பொருந்தும் (உமக்கு பொருந்துமென்றால் நான் என்ன செய்வது )
நீவீர் தாழ்த்தி பேசி இருந்தால் கண்டனங்கள்

பொதுவாக வரலாற்றுக்கு முந்தைய காலங்களில் ஏட்டில் எழுதப்பட்ட வரலாறுகளுக்கு முந்தைய காலத்தில் தென்குமரி கடலில் லெமூரியா கண்டம் இருந்தது அங்கிருந்தான் மனித சமூகமே தோன்றியது என்பதெல்லாம் கருது கோள்கள் கோட்பாடுகளே
அவற்றை அப்போது படமெடுக்க அதற்கான உபகரணங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதை
மேதகு அய்யா உணர்ந்து கொள்வராக
அந்த கோட்பாட்டின் அடிப்படையில் பேசும் தமிழனை இழித்தும் பழித்தும் பேசும் நீவீர் யார்
உமது மொழி என்ன (தமிழனென்று தயவு செய்து பகரவேண்டாம் )
என்பதை கேட்கவும் உம்மை போன்றவர்களை அம்பலப்படுத்தவும்
தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு யாம் வேண்டுதல் விடுப்பதில் என்ன தவறு

//
குமரிக்கண்டம் என்பது முற்காலத்தில் இருந்ததாகக் கருதப்படும், கோட்பாடுகளால் ஊகிக்கப்படும் அல்லது இலக்கியங்களில் கற்பனையாகவோ சாட்சியாகவோ கூறப்படும் கண்டம் அல்லது பெருநிலப்பரப்பாகும். குமரிக்கண்டம் எனும் கண்டம் போன்ற பெரும் நிலப்பகுதியானது இன்றுள்ள இந்தியாவின் எல்லையான குமரி முனைக்குத் தெற்கே முற்காலத்தில் பாண்டியர்களின் ஆட்சிக்குக் கீழ் அமைந்திருந்ததெனக் கருதுவதற்கு இடம் தரும் வகையில் பண்டைத் தமிழ் இலக்கிய நூற்களில் சில தகவல்கள் உண்டு. தேவநேயப் பாவாணர் முதலானோர் இந்தக் குமரிக்கண்டத்தில்தான் மாந்தர்களும் தமிழர்களும் முதன்முதல் தோன்றினரென எழுதியுள்ளனர்[1] ஆதி மனிதன் தோன்றியிருக்கக் கூடிய தென் குமரிக்கண்டம் கடல்கோளால் (சுனாமி போன்ற ஆழிப்பேரலைகளால்) அழிவிற்குட்பட்டது என்பது சில தமிழறிஞர்களின், அறிவியல் முறைப்படி நிறுவப்படாத, கருத்து. பண்டைத்தமிழ் இலக்கிய நூல்களில் கிடைக்கப்பெறும் தகவல்களில் சிலவற்றைக் கீழே காணலாம்:
  • சிலப்பதிகாரத்தில் "பஃறுளியாறும்", "பன்மலை அடுக்கத்துக் குமரிக்கோடும்" "கொடுங்கடல் கொண்டது" பற்றிக் கூறுகின்றது.
  • அடியில் தன்னள வரசர்க் குணர்த்தி
    வடிவே லெறிந்த வான்பகை பொறாது
    பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
    குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள
    வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு
    தென்றிசை யாண்ட தென்னவன் வாழி (சிலப். 11:17-22)
  • பாண்டியனை வாழ்த்தும் பொழுது
    "செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்த
    முந்நீர் விழவின் நெடியோன்
    நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே" (புறம் 9)
  • "தொடியோள் பௌவம்" என்னும் சிலப்பதிகாரத் தொடர்க்கு அடியார்க்கு நல்லார் என்னும் உரையாசிரியர் கொடுக்கும் விரிவான விளக்கத்தில் "தென்பாலி முகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளி என்னும் ஆற்றிற்கும் குமரியென்னும் ஆற்றிற்கும் இடையே எழுநூற்றுக் காவத வாறும், இவற்றின் நீர்மலிவானென மலிந்த ஏழ்தெங்க நாடும், ஏழ்மதுரை நாடும், ஏழ்குணகாரை நாடும், ஏழ்பின்பாலை நாடும், ஏழ்முன்பாலை நாடும், ஏழ்குன்றநாடும், , ஏழ்குறும்பனை நாடும் என்னும் இந்த நாற்பத்தொன்பது நாடும் குமரி கொல்லம் முதலிய பன்மலைநாடும், காடும் நதியும் பதியும் தடநீர்க்குமரி வடபெருங்கோட்டின் காறும் கடல் கொண்டொழிதலாற் குமரியாகிய பௌவ மென்றா ரென்றுணர்க." [2]
  • இரண்டாம் சங்கம் இருந்த காலத்தில் கபாடபுரம் என்ற தலைநகரம் முழுகிய பின்னரும் குமரி ஆறு இருந்ததென்பதை தொல்காப்பிய சிறப்புப் பாயிர வரி, "வட வேங்கடந் தென்குமரி" குறிப்பதாகக் கருதுகின்றனர்.
  • தெனாஅ துருகெழு குமரியின் தெற்கும்"
    "குமரியம் பெருங்துறை யயிரை மாந்தி" (புறம் 6:67)
  • "மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின்
    மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்பட" (கலித். 104)
    என்னும் குறிப்பு, பழம் பாண்டிய நாட்டைக் கடல்கொண்டதை குறிக்கின்றது என்பர்.
  • இறையனார் அகப்பொருள் உரையில் விரிவாக ஆண்ட அரசர்களின் வரிசை, தமிழ் அவையில் இருந்த புலவர்களின் வரிசை முதலியன குறிக்கப்பெற்றுள்ளன. இதுபோலச் செய்திகள் தமிழ் இலக்கியத்தில் வேறு எங்கும் இல்லை.
இத்தென்குமரிக்கண்டத்தின் தலைநகராகத் தென்மதுரை விளங்கியதாகவும் மேலும் தென்மதுரையில் தலைச்சங்கம் இருந்ததென்பதும், அதனை அடுத்து மேலும் இரண்டு சங்கங்கள் இருந்தனவென்பதும் நூற்களின் தகவல்களாகும். மேலும் முதற் கடற்கோளால் குமரிக்கண்டம் என்று கூறப்படும் நிலப்பகுதி அழிவுற்றதென நூற்தகவல்கள் குறிக்கின்றன. இவ்வாறு மொத்தம் நான்கு கடல்கோள்கள் நிகழ்ந்ததாகக் கருதுகின்றனர். கிடைக்கப்பெற்ற நூற்தகவல்களின் மூலம் உறுதியாகக் கூறமுடியாத அளவிற்குக் குமரிக்கண்டம் வெறும் கற்பனைக் கண்டமென்பது பலருடைய கருத்து. இக்குறிப்புகளில் உள்ள உண்மை இன்னும் அறிவியல் முறைப்படி நிறுவப்படவோ, மறுக்கப்படவோ இல்லை. இறையனார் அகப்பொருள் உரையில் கூறியுள்ளது உண்மையாக இருப்பின் தமிழர்களின் இலக்கிய காலம் சுமார் கி.மு 10,500 ஆண்டுகள் வரை செல்லும். இதற்கு வலுவான பிற உறுதிகோள்கள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.//

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D

தமிழ் பற்றும் கடமையும்

பொதுவாக இணைய வெளியில் தமிழ் உணர்வு மேலோங்கி வருகிறது
தமிழனாக இருந்தால் இதை பகிரவும் என்றெல்லாம்
ஒரு ஆர்வமிகுதியால் இவ்வாறு எழுதுகிறார்கள் எனினும் தமிழன் பெருமையை பேசுமிடத்து சிலருக்கு எரிச்சல் வருவதை தவிர்க்க இயலாது
தமில்ன்னு எழுதுபவனெல்லாம் தமிழின் பெருமை பேசுகிறான் என்றும் அவனெல்லாம் மொண்ணை தமிழனென்றும் எழுதி வருகிறார்கள்
அவர்களுக்கு எனது பதில் இதுதான்
தமிழ் என்கிற தாய்க்கு அவளது மகனின் சிறு தவறுகள் பெரிய விசயமில்லை அதை அவர்கள் திருத்தி கொள்வார்கள்
ஆனால் நீங்கள் உங்கள் மொழியின் வளத்தை எழுதுங்கள் அதை தமிழோடு ஒப்பிட்டோ ஒப்பிடாமலோ உங்களுக்கென்று மொழி இருப்பின் அதை எழுதுங்கள் பேசுங்கள்
ஆனால் தமிழன் பெருமையை பேசாமல் தடுக்காதீர்கள்
ஏனெனில் ஒரு நாடு அதன் மொழியை இழந்து விட்டால் அவர்களை
காப்பாத்த யாராலும் முடியாது
ஆகவே மொழியில் தவறு செய்கிறார்கள் எழுத்தில் தவறு செய்கிறார்கள் என சொல்லி நீவீர் துரோகம் புரியாதீர்
புரிதலுக்கு நன்று
தமிழ் நேசன்
யேசுராசன்