Monday 15 February 2016

தமிழ் பற்றும் கடமையும்

பொதுவாக இணைய வெளியில் தமிழ் உணர்வு மேலோங்கி வருகிறது
தமிழனாக இருந்தால் இதை பகிரவும் என்றெல்லாம்
ஒரு ஆர்வமிகுதியால் இவ்வாறு எழுதுகிறார்கள் எனினும் தமிழன் பெருமையை பேசுமிடத்து சிலருக்கு எரிச்சல் வருவதை தவிர்க்க இயலாது
தமில்ன்னு எழுதுபவனெல்லாம் தமிழின் பெருமை பேசுகிறான் என்றும் அவனெல்லாம் மொண்ணை தமிழனென்றும் எழுதி வருகிறார்கள்
அவர்களுக்கு எனது பதில் இதுதான்
தமிழ் என்கிற தாய்க்கு அவளது மகனின் சிறு தவறுகள் பெரிய விசயமில்லை அதை அவர்கள் திருத்தி கொள்வார்கள்
ஆனால் நீங்கள் உங்கள் மொழியின் வளத்தை எழுதுங்கள் அதை தமிழோடு ஒப்பிட்டோ ஒப்பிடாமலோ உங்களுக்கென்று மொழி இருப்பின் அதை எழுதுங்கள் பேசுங்கள்
ஆனால் தமிழன் பெருமையை பேசாமல் தடுக்காதீர்கள்
ஏனெனில் ஒரு நாடு அதன் மொழியை இழந்து விட்டால் அவர்களை
காப்பாத்த யாராலும் முடியாது
ஆகவே மொழியில் தவறு செய்கிறார்கள் எழுத்தில் தவறு செய்கிறார்கள் என சொல்லி நீவீர் துரோகம் புரியாதீர்
புரிதலுக்கு நன்று
தமிழ் நேசன்
யேசுராசன்

No comments:

Post a Comment