Monday 5 October 2015

இணைய முகவரியும் -சொந்த முகவரி மறைப்பும் ஏன்?




நான் ஒரு குழுமத்தில் மடல் ஆடி வருகிறேன் – இங்கே எனது சொந்த பெயரும் ஊரும் மொபைல் எண்ணும் விலாசமும் கேட்டார்கள் நான் கொடுக்கவில்லை ஏனெனில் நான் ஏற்கனவே அச்சுரத்திலில் இருக்கிறேன் .

ஒரு சிறுபான்மை மதத்தை சேர்ந்தவன் அல்லது தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள் பெரும்பான்மை மதம் அல்லது சாதியை கேள்வி கேட்ட இயலாத சூழல் இந்த நாட்டில் நிலவுவதால் எமது சொந்த விலாசத்தை இணையத்தில் வெளியிட இயலவில்லை இதற்காக வெக்கப்படவேண்டியது இந்த அமைப்புதானே தவிர யாமல்ல
இணையத்தில் நாம் யாரையும் தூற்றவோ துன்பப்படுத்தவோ போவதில்லை எனும் போது நான் எதற்கு பயப்பட வேண்டும் மேலும் அப்படி சொந்த விலாசம் கொடுத்தால்தான் மடலாட வேண்டும் என்றால் இவர்கள் என்னை மட்டறுத்துலாம் அல்லது நீக்கலாம்
அதை விடுத்து தொடர்ந்து நீ ஒரு போலி என சொல்லி வருகிறார்கள்
இதன் காரணம் யாதென்று எனக்கு விளங்கவில்லை

யேசுராஜன்