Thursday 7 April 2016

எனது டைரி 06.04.2016

மேற்கண்ட புள்ளிகளை பற்றி பேசும்போது எனது பிரசெப்டர் அடுத்த கட்டத்திற்கு முன்னேறி தியான காட்சிகள் பற்றி பேச ஆரம்பித்தார் காட்சிகள் எல்லாம் பொய் என்பது அவரது வாதம் ஆனால் வராது வந்த மாமணியாய் அமைந்த காட்சிகளை அவர் மறுப்பதை எனது மனம் ஏற்று கொள்ளவில்லை
தொடர்ந்து காட்சிகளும் அமையவில்லை என்பது வருத்தமான விசயம் இருந்தாலும் தொடர் முயற்சி பயனளிக்கும் அல்லவா?
தியான உலகம் என்பது முற்றிலும் தனிபட்டது குருவை தவிர சாதாரண மற்றொரு மனிதன் வழிகாட்ட ஆலோசனை சொல்லவே இயலாது இதை மனதில் கொண்டுதான் பேசவேண்டும் என்பதை புரிந்து கொண்டேன்

 னிதன் தேடி தேடி ஓடி அலையும் விசயங்களான பணம் புகழ் மோகம் ஆக்கியன அவனை முன்னேற விடாமல் பிடித்து வைக்கின்றன

ஆனால் நாம் அதை உணரமாட்டோம் எங்கோ ஒரு கோயில் திண்ணையில் உக்கார்ந்திருக்கும் ஒரு யோகியை விட பரிணாம வளர்ச்சியில் கீழ் தட்டில் இருக்கும் ஒரு நபர்  காரில் சென்று கொண்டு இருக்கலாம்

ஆனால் அந்தோ அந்த மனிதன் பரிதாபத்துக்கு உரியவன் என்கிறார்கள் யோகிகள்





06.04.2016

No comments:

Post a Comment