குறிப்பிட்ட
நேரங்கள் மாஸ்டரால் அறிவிக்கப்பட்டுள்ளன காலை 6.30 மற்றும் 8.00 மற்றும்
இரவு 9.00 மணி ஆகிய நேரங்களில் அதிக பட்ச உத்வேகம் அந்த நேரத்தில்
பாய்கிறது இந்த காலங்களில் உக்கார்ந்து பார்த்தேன் எனது முயற்சி இன்றி
தியான நிலைக்கு மனம் போவதை அறிய முடிகிறது.
அரசியல் :
தேர்தலுக்கான
ஏற்பாடுகளை பார்த்து சிரிப்புதான் வருகிறது . என்ன தேர்தல் நடத்தினாலும்
ஏன் அடிப்படை பிரச்சனைகள் மாறுவதில்லை சாதி வேறுபாடு மற்றும் போராட்டம்
வறுமை இதெல்லாம் ஏன் மாறுவதில்லை ஆன்மீக உலகில் இதற்கான பதில் இருக்கிறதா ?
குடும்பங்களின் நிலை :
தற்சமயம் குடும்பங்கள்
தனிதனியாக பிரிந்து யாருக்கும் யாரும் பிரயோசனம் இல்லாமல் போய்கொண்டு
இருக்கின்றன இதற்கு ஆன்மீகத்தில் தீர்வு இருக்கிறதா?
அரசியல் என்பது தனிநபர்கள் அனைவரும் சேர்ந்து ஏற்படுத்தி கொள்ளும் ஒரு அதிராக பண்பு கொண்ட அமைப்பு
குடும்பமும் அதே போலத்தான்
மன அமைப்பில் ஏற்படும் மாறுதல்களே இவற்றின் சீரழிவிற்கு காரணம்
தனிநபரின் பண்பு நலன்கள் ஒழுங்காக அமையும் போது அது மற்றவர்களுக்கு ஒரு வைரஸ் போல பரவுகிறது
தனிநபரின் பண்பு நலன்கள் சரியாக அமையாத போது அதுவும் மற்றவர்களால் பின்பற்ற படுகிறது
தனிநபர்களின் பண்பு நலன்களை மாற்ற முடியாத அமைப்பாகி விட்டது கல்வி அமைப்புகள் ஆகவே ஆன்மீகம்தான் ஒரே உதவி புரியும் கருவி
அனைவரையும் ஆன்மீகத்தை நோக்கை ஈர்ப்பதை தவிர வேறு வழியே இல்லை
15.04.2016
No comments:
Post a Comment