Thursday 7 April 2016

எனது டைரி 30.03.2016

என்னதான் நமது தந்தை அன்பானவர் சிறப்பானவர் உலகை படைத்தவர் என்றாலும் அவரை நான் தியானிக்கிறேன் என சொல்லி கொண்டாலும் அவரது அருமையான போற்றதக்க குணங்களில் ஒன்று மன்னிக்கும் குணம் அது என்னிடம் இருக்கிறதா என சோதித்து பார்த்துகொண்டேன் அது இல்லை என்பதுதான் உண்மை
உடனே அதற்கான பிரேயரை ஆரம்பிக்கனும் ஏனெனில் பிரேயர் இது ஒன்றுதான் வழி வேற வழியே இல்லை நான் யாரை எல்லாம் துன்புறுத்தி இருக்கிறேனோ மனதான் சொல்லால் செயலால் அவர்களுக்காக மன்னிப்பை கோரும் பிரேயரை தொடங்கிய உடனே அப்போ நம்மை துன்புறுத்தியவர்கள் சரியாக செய்தார்களா என்கிற எண்ணமே
ஆனால் காலத்தின் தூரத்துக்கு எட்டாத நமது பரிணாம வளர்ச்சியில் நாம் செய்த செயல்களின் பதிவுகள் நம்முடைய ஆழ்மனதில் உள்ளன அவற்றிக்கு ஏற்பவே நமது சுபாவம் அமைகிறது நமது சுபாவத்தை மாற்றுவது குதிரை கொம்பான செயலாகும்
ராமா ராமான்னு கத்துகின்ற கிளி வேடன் வந்ததும் கீ கீன்னு கத்தும்னு ராமகிருஸ்ணர் சொல்வதை போல
அமைதி தியானம் இதெல்லாம் இருந்தாலும் நமது கட்டுப்பாட்டை இழந்து நிலை தவறி விடும்போது
நமது மனம் இன்னும் விலங்கின் நிலையை விட்டு சிறிதுதான் உயர்ந்துள்ளது என்கிற நினைப்பு வருகிறது
எனவே பிரேயர் கம் தியானம் என்கிற விசயத்தை எனது பிரசப்டருடன் பேசி விட்டு தொடங்க ஆரம்பித்து இருக்கிறேன்
யேசுராஜன்
30.03.2016

No comments:

Post a Comment