Friday 8 April 2016

எனது டைரி 08.04.2016



தியானத்தின் போது மனதின் ஓடும் எண்ணத்தின் பின்னால் நாம் செல்கிறோம் ஒரு இளைஞர் பதின்ம வயதில் பெண்களின் பின்னால் செல்வதற்கும் ஒரு குடிகாரன் மதுவை தேடி போவதற்கும் ஒப்ப
நமது மனம் தொடர்ச்சியாக எண்ணங்களை பின்பற்றி போகும்
அதற்கு எல்லையே இல்லை எத்தனை மணி நேரம் போனாலும் தியானம் கை கூடவே செய்யாது
ஏனெனில் மனம் எனும் ராட்டிணத்தில் ஏறிவிட்டோம் பிறகு அதுவே நின்று நம்மை இறக்கி விட்டால்தான் உண்டு
இப்போ எண்ணத்தை கவனி என்கிறார்கள்
ஒரு சின்ன டூல் கொடுக்கிறார்கள் கவனிக்க ஆரம்பிக்கிறோம்
ஒவ்வொரு எண்ணமாக அது முடியும் வரை கவனிக்க வேண்டும் ஆனால் மனம் அப்படி செய்யாமல் ஒரு எண்ணத்தின் மீது மற்றோரு எனண்ணத்தை படிய வைக்கிறது அறிகிறோமா ?
இந்த எண்ணம் முடிந்த்தும் மற்றொரு எண்ணம் தோன்றும் அதுவும் முடியட்டும் கொஞ்சம் கொஞ்சம் மாக இந்த எந்திரம் நின்றுவிடும்
ஏனெனில் அதற்கு சக்தி இல்லை அந்த சக்திதான் இப்போ கவனிக்க இறங்கிடுச்சே
எண்ணம் இல்லாட்டா மனம் ஏது மனம் தானே நாம்
எண்ணம் ஒழிய மனோ நாசம் ஏற்பட்டால் தூய ஆத்மா பிரகாசிக்கும் இதான் சுருக்கமான ஒரு விளக்க உரை
நம்ம கையில் இருப்பது எண்ணங்களை கவனித்தல் இந்த ஒரு விசயத்தை தவிர  உலகம் கடவுள் மனிதன் இதெல்லாம் விவாதிப்பதும் பேசுவத்உம் மேலும் மேலும் மனதில் எண்ணத்தை உண்டாக்கவும் தியான காலத்தில் இடைஞ்சல் செய்யவும் ஆரம்பிக்கிறது

விவாத்த்தில் எந்த உண்மையும் கண்டு பிடிக்க முடியாது ஏனெனில் விவாதம் என்பது எண்ணங்களை கொண்டு செய்யப்படும் விசயம் எண்ணத்தை வைத்து எதை செய்தாலும் அது குறைபாடு கொண்ட்து ஏனெனில் எண்ணம் என்பது பழைய பதிவுகளின் அடிப்படையில் மனம் உருவாக்கும் ஒரு விசயம்
ஆனால் விசயங்கள் புதியவை

No comments:

Post a Comment