Thursday 7 April 2016

எனது டைரி 02.04.2016

தியானத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி நகரவேண்டும் என்பதுதான் எனது விருப்பம் ஆனால் தியானம் என்பது எந்த விருப்பத்தையும் கொண்டிருக்க கூடாத ஒரு விசயம் என்பதை திரும்ப திரும்ப மனதுக்கு சொல்ல வேண்டியதிருக்கிறது

ஆசை என்பதை பொருத்தவரை நமது மனதில்  a , b , c என்ற மூன்று புள்ளிகள் இருக்கின்றன இது இடது மார்பின் நிப்பிலில் இருந்து இரண்டு இஞ்சு கீழே a அதிலிருந்து முறையே இரண்டு இஞ்சு இடைவெளியில் இரண்டு புள்ளிகள் இருக்கின்றன .
A - இந்த புள்ளியில் நமது ஆசைகள் உற்பத்தியாகின்றன எந்த ஒரு ஆசையும் இங்கு உற்பத்தி ஆகிறது
B - இந்த புள்ளியில் ஆசை நிறைவேற்றத்துக்கு தேவையான பதிவுகள் பதிவாகின்றன
C- இந்த புள்ளியில் ஆசை நிறைவேறினால் ஏற்படும் மகிழ்ச்சியும் அது நிறைவேறாவிட்டால் ஏற்படும் வலியும் பதிவாகின்றன
இந்த பதிவுகள் ஏற்படுத்தும் புள்ளிகள் மீது கிளீனிங் செய்வது ரொம்ப முக்கியமானது
ஏனெனில் எவ்வளவு அழங்காரமான பங்களாவாக இருந்தாலும் குப்பையை கூட்டி ஒதுக்கி அதை சுத்தமாக வைக்கவேண்டும் அது நமது கடமை
முதல் புள்ளியில் தொடர்ச்சியாக கவனிக்க நமது ஆசைகளை கண்டறியலாம் இரண்டாவது புள்ளியில் இருக்கும் பதிவுகளை வெளியேற்ற தினமும் இருபது நிமிடம் செலவு செய்து அந்த புள்ளி மீது கவனித்து தேவையற்ற ஆசைகள் வெளியேறுவதாக நினைக்க வேண்டும் மற்றபடி மத்த புள்ளிகள் ஆக்டிவேட் ஆகும் போது நமது உணர்வு நினை வளர்ந்து விடும் பிறகு நமக்கு அறியாமல் ஆசைகள் கோபம் காமம் உருவாகாது
இதை பயிற்சி செய்கிறேன் நீங்களும் முயற்சி செய்து பார்க்கலாம்
யேசுராஜன்
02.04.2016

No comments:

Post a Comment